Sunday 15 November 2015

இலை தேடும் வேர் தேடி......(ஓர் காதல் பயணம்)


இலையும் காயும் காதலிட
இமைக்காமல் சூரியனும் தூதுமிட
இரவெல்லாம் காத்திருக்குமாம் இரண்டும்
இலை காற்றில் செய்தி சொல்ல
இலை சொன்ன சேதிக்கு
இனிப்பாய் பதில் சொல்லுமாம் காயும் கனிந்து...
இப்படியே போனதாம் பொழுதுகள்
இனிப்பிட்ட காய் கனிந்து கீழே விழ
இலை துடித்ததாம் வலியில்
இலை உதிர காற்று வந்ததாம்...
இலை உதிர்ந்து மக்கிட
இதன் முன்னர் விழுந்த கனி
இலையோடு சேர்ந்ததாம் மண்ணில்
இரண்டின் சேர்க்கையில் விதையொன்று
இன்முகமாய் விருட்சமாக தொடங்கியதாம்,,,
இந்த விதை வேரிட மண்ணும் சேர
இந்த பணிக்கு நீரும் துணை வர
இதழோரம் புன்னகைத்து துளிரிட செடியும்
இலையும் மேல் வந்ததாம்
இன்முக சூரியன் ஒளிதர பூ வந்ததாம்
இலையும் பூவோடு காதல் புரிய
இலைமறை காதலல்ல இது
இலையின் காதல் காயோடு....
இந்த காதல் இப்படியே தொடர
இதற்கு வந்ததாம் சிக்கல்
இலை துடிக்க காய் பறித்தனராம்
இலை துடித்தை யார் நோக்குவர்
இலையென இகழ்ந்தனரோ இவ்வுலகில்
இலை உதிர மண்ணில் மக்கியதாம்...
இலை மக்கி வேருக்குச் செல்ல
இலை வேராகிய மன்னனிடம் முறையிட
இலை சொன்ன சேதி கேட்டு
இருத்தல் கொள்ளாமல் வேர் துடித்ததாம்
இச்சேதி தனை நீரிடம் சொல்ல...
இன்முக வாழ்க்கையில் சிக்கலா
இனிதே பயணித்த காதலில் துயரமா
இலை நிலைக் கண்டு துயரமிட்ட நீரும்
இனிதாய் பூத்திட உரமிட்டதாம் வேருக்கு
இலையும் காத்திருந்ததாம் பூவிற்கு,,,
இலை காத்திருத்தல் அறியாமல்
இரவோடு இரவாக வீழ்த்தினான் மரம்தனை
இனிய காத்திருப்பிற்கு வந்ததே வேதனை...
இனியும் துளிர்க்க இயலா வேர்
இரவில் வெட்டி வீழ்த்திட - மக்கிய
இலை இரவெல்லாம் அழுததாம்
இலை அழுத கதை கேட்டு
இடியோடு மேகமும் முழங்கியதாம்
இலை துயர் தீர்க்க ஊரெல்லாம் நீர்
இலை தேடும் வேர் தேடி...

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...