Wednesday 19 October 2011

காதல் கடிதமே...


வந்துவிடும் என நினைத்து
வந்ததோ என நினைத்து
வந்து வந்து பார்க்கிறேன் - நீ
வந்து வந்து போனாயோ - இல்லை
வந்தவுடன் போனாயோ....

வாசல் வரை வந்து
வாசம் அதை தந்து
வாசிக்க ஆசையாய் வந்து
வார்த்தையாய் போனாயோ - என்
வாசமான வாக்கியமே!!

வரிகளில் உனை தேடி
வரிசையாய் வார்த்தைகளில் தேடி
வரிசையிட்ட வாக்கியத்தில்
வரிசையிடா என் ஆசைகளோடு....

வந்து செல்லும் போஸ்ட்மென்
வந்து செல்லும் சைக்கிள் மணி
வந்து செல்லும் காலிங் பெல்
வந்து செல்லும் காலடி ஓசை
வந்து வந்து போகிறது
உனை மட்டும் மறக்காமல்
தந்து விடாமல் செல்கிறது
என் கனவு காதல் கடிதமே!!!!!!!!

Tuesday 18 October 2011

நாணயம்.


சில்லறை என்றே ஒதுக்கியது - இன்று
சில்லறையே ஒதுக்கியது 
சில நேரம் கிடைத்து - பல நேரம்
சில்லறையோ சிறையாகிப் போனது
சிலரின் உண்டியலாகிப் போனது....

சில்லறை வியாபாரமாகியது - இல்லை
சில்லறையில் வியாபாரமாகியது....

ரூபாய்
ஒன்றோடு ஒன்று
ஒன்றோடு ஜந்து
ஒன்றாகிப் போனது வடிவத்தில்
அதுவே எளிதாகிப் போனது...

கேட்டு கொடுக்கவோ - இல்லை
கேட்டவுடன் கொடுக்கவோ
கேள்வியாகிப் போனது
கேலியாகிப் போனது
சில்லறை வணிகமாகிப் போனது...

அரசே!
ஒற்றுமை கோரி
ஒற்றுமை தேடி
ஒற்றுமை வைத்தாயோ
ஒன்றாய் வடிவத்தில்....

அதனால் உண்டியலாகிப் போனது - இல்லை
அது உண்டியலுக்குள் போனது...

அரசே!
நீ பெரிய வியாபாரி
நீ நாணயமும் வெளியிட்டு
நீ உண்டியலையும் பெருக்குகிறாய்
நீ நாணயத்தில் வியாபாரம் காண்கிறாய் - ஆம்
அரசே நீ பெரிய தன வணிகன் தான்
சில்லறையினைச் சிறையிட வைப்பதினால்...

Monday 17 October 2011

இன்றைய கல்வி நிலை...


புத்தகத்தினைச் சுமையாக சுமந்து
புத்தியினைக் கற்க மறந்து
புழுதியில் மடியும் தருணங்கள்...

மார்க் என்று பட்டியலிட்டு
மதிப்பெண் என்று மதிப்பிட்டு
மதிப்பில்லா உயிர்களில்
மரணத்தினைத் தினிக்கிறது...

படித்தோர் எல்லாம் அறிஞரா
படித்தோர் எல்லாம் பண்பாளரா
படித்து தெரிய பட்டமில்லை
படித்ததைக் காட்ட தான் பட்டம்
படித்ததை சொல்லித் திரிய அல்ல....

புத்தகம் கொடுத்து
புத்தகத்திற்கு சுருக்க உரை கொடுத்து
புத்தகத்தின் வரி பிறழாமல்
புதுமைகளை முடக்கி
புது சிந்தனைகளைச் சிதைத்து
புத்தியினை விற்கும் கூடம்
புதுமை மழுங்கி கிடக்கும் பள்ளிகூடம்....

எழுத்து கூட மாறாமல்
எண்ணம் அது சேர்க்காமல்
எது சொன்னாரோ
எது கற்பித்தாரோ
எதுவாகினும் எழுத்தானால்
எப்படி இருப்பர் மாணவரும் தான்
எழுந்து நின்றும் முடவனாய்
எழுச்சி மறந்து மடையனாய்...

இன்றைய கல்வி நிலை
இளைப்போர் உருவாக்கும்
இளைய சமுதாயம்
இழந்திருக்கும் அறிவினை
இதுவா நாளைய சமுதாயம்
சிந்திப்பீர்...

ஆய்ந்து படித்து
ஆழ்ந்து படித்து
அனுபவத்தில் படித்து
அனுதினமும் படித்து
அக்கறையாய் பகிர்வதே
அறிந்ததின் நோக்கம்...

அறிவோம் அறிவினை
அடுத்தவருக்காக அல்ல
நம்மை நாமே அறிந்து கொள்ள...

Saturday 15 October 2011

தூங்கி கிடக்கும் துக்கங்கள்...


1.        வெறும் கூடு எலும்பிலே
           சதையோடு நரம்பும்
           சின்னமாய் மூளையிட்டு
           பெரிதாய் எண்ணமிட்டு
           வண்ண வண்ண கனவிட்டு
           சில நேர துக்கமிட்டு
           பல நேர நினைவிட்டு
           ஒரு நொடி சந்தோஷம்
           பல நாட்கள் காத்திடுதே
           வாழ்வினை அர்த்தமிடுதே
           வாழ்ந்து பார்ப்பாயே..

2.        அழுது அழுது என் கண்டாய்
           அழுவது வாழ்வென்றா
           துயரமாய் எண்ணியே
           துச்சமாய் மிஞ்சியே
           அச்சமாய் வாழ்ந்தே
           மிச்சமாய் வாழ்தல் வாழ்க்கையோ...

           போராட்டமில்லை வாழ்க்கை
           போராடி தோற்பதற்கோ, ஜெயிப்பதற்கோ
           வாழ்க்கை ஓர் சாலை
           யாரும் பயணிக்கலாம்
           யாருக்கும் பாதையாயிருக்கலாம்
           பயணிப்பவன் பொறுத்து...


3.         துக்கமென்ற ஒன்று தூங்கி கிடக்கு
            தூக்கமின்றி நெஞ்சில் பதுங்கி கிடக்கு
            வரும் என்று காலம் பார்த்திருக்கு
            வந்துடுமோ என துக்கம் காத்திருக்கு...

            துக்கம் பொதுவென்று நெஞ்சு மறந்திருக்கு
            நினைவு படுத்தும் எண்ணம் மறந்திருக்கு - துக்கமாய்
            நினைவே வாழ்க்கையென நினைத்திருக்கு
           அத்தனை சந்தோஷமும் மறைஞ்சிருக்கு...

            சொல் எடுத்து வரும் முன்னே
           வார்த்தை அழுகையாய் வந்திடுமோ என
           வருவதை தடுக்க பொய்யான மனசு காத்திருக்கு
           இதுவும் கடக்குமென்று உள் மனசு 
           சொல்லி சொல்லி மரத்திருக்கு
           தூண்டிவிட நெஞ்சமதை 
           தூண்டில் வரலையே...

           துக்கம் பொதுவென உணர்ந்திடு - இது
           துக்கமே இல்லையென உணர்ந்திடு
           பக்கம் வரும் முன்னே துக்கமதை
           அக்கம் பக்கம் பார்க்காமல்
           அருகாமையில் வைத்திடு
           நித்தம் அதை பாராமல்
           சுத்தமாய் மறந்திடு
           அர்த்தமாய் விடும் வாழ்க்கை தான்...

Monday 10 October 2011

ஆசையாய் ஆசைபடு...


1.     ஆசையாய் ஆசைபடு
         ஆசையால் பார்ப்பதனால்
         ஆசையால் கேட்பதனால்
         ஆசையால் தொடுவதனால்
         ஆசையால் கொடுப்பதனால்
         ஆசையால் எடுப்பதனால்
         ஆசைக்குப் பங்கமில்லை
         ஆசைபடுதலுக்கும் பங்கமில்லை
         ஆசை பேராசை யில்லாமல் இருந்தால்...

         ஆசையாய் ஆசைபடு
         ஆசைத் துன்பமுமில்லை
         ஆசை இன்பமுமில்லை
         ஆசை ஓர் எண்ணம்
         ஆசையை அடைந்தே தீர்வதும் எண்ணம்
         ஆசைக்கு ஆசைபடுவதும் எண்ணம்
         ஆசைக் கிட்டாமல் அழுவதும் எண்ணம்
         ஆசையை அடக்கினால்
         ஆசை நிராசையானாலும்
         அசையாமல் வாழ்க்கை பயணிக்கும் வண்ணம்
         ஆசையை ஆள்வதும் திண்ணம்...

          ஆசையாய் ஆசைபடு
          உன் மட்டுமில்லாமல்
          உலகத் திற்காக ஆசைபடு...


2.        உன் ஆசை வாங்குவதென்றால்
          அவன் ஆசை விற்பதுவே
          ஆசையாய் ஆசைபடு
          உன் ஆசைக்காக அல்ல
          அவன் ஆசைக்காக

          உன் ஆசை ஜெயிப்பதென்றால்
          உலக ஆசையும் அதுவே
          நியதியாய் ஒருவன் தோற்பதுமே
          ஆசையாய் ஆசைபடு
          உன் ஆசைக்காக அல்ல
          அவன் (உலக) ஆசைக்காக

         உன் ஆசை கேட்பதென்றால்
         அவன் ஆசை சொல்வதுவோ - இல்லை
         அவன் ஆசை மறுப்பதுவோ - இல்லை
         அவன் ஆசை கொடுப்பதுவோ
         ஆசையாய் ஆசைபடு
        உன் ஆசைக்காக அல்ல
        அவன் ஆசைக்காக...


        உன் ஆசை இன்பமென்றால்
        அவன் ஆசையும் அதுவே
        உன் ஆசை அவன் ஆசை
        "நான்" ஆசையென தனியாகாமல் 
        "நாம்" ஆசையென பொதுவானால்
        பிரித்திடுமோ ஆசையும் தான்
        நான் நீ யென சந்தியிலே...

        ஆசையாய் ஆசைபடு
        உன் ஆசைக்கும் அல்ல
        அவன் ஆசைக்கும் அல்ல
        உலக ஆசையான பொது ஆசைக்கு
        அமைதியெனும் பெயரெடுத்து...

Sunday 9 October 2011

தன்னை அறியாதது...


1.        தன்னை தானும் அறியாமல்
           தன்னை தனக்கே நோக்காமல்
           தன்னை தாழ்வாய் மதிப்பிட்டு
           தன்னை தரணியில் அழிப்போனே


           தன்னை தரிசாய் பார்க்காமல்
           தன்னை தினுசாய் பார்த்தாலே
           தன்னுள் சக்தி கண்டிடலாம்
           தன்னை தாமும் உயர்த்திடலாம்...

2.        தன்னை துட்சமாய் எண்ணியே
           தன்னை அச்சமாய் பார்க்கும் பதரே
           தன்னை மிஞ்சும் சக்தி உளதோ
           தன்னை விஞ்சும் புத்தி உளதோ
           தன்னை எண்ணி பார்த்திடடா
           தன்னை தானே உணர்ந்த்திடடா
           தன்னை தரணியில் உயர்த்திடடா...

3.        உன் நோக்கி பார்
           உள் நோக்கி பார்
           உம் மனம்நோக்கி பார்
           உன் வினை யாது என பார்
           உன் போன்று உலகில் 
           உளரா எனப் பார்
           உயர்ந்திடலாம் உயர்வாய் நீ....

4.       சிந்தித்துப் பார்ப்போமே 
          சிந்தையிட்டுப் பார்ப்போமே
          சிந்தையில் பார்ப்போமே
          சிந்தனையில் சேர்ப்போமே
          சிறகடித்து சிரிப்போமே
          சின்னமாய் குறுகாமல்...

5.       உணவு உண்டு உடை யுடுத்தி
          உடல் களித்து உயிர் வளர்த்து
          உறக்கம் தந்து உனை மறந்து
          உலகில் வாழும் உயிருள் ஒன்றே
          உன் நோக்கி உன் மனம் நோக்கி
          உள் நோக்கி உள்ளார்ந்து நோக்கி
          உலகில் வலம் வா உன்னையே வென்று வா வா....

6.       ஊனமாய் உனை யாக்கி
          உணவுக்குப் பார மாக்கி
          உறைவிட உறுத்த லாக்கி
          உன்னையே தாழ்த்தி யுருக்கி
          உடலால் உயிர்தல் நலமோ
          உயிரும் உடலுக்குப் பாரமோ....

          உனையுருக்கி உள் நோக்கி
          உன்னுள் விருட்சமாய் விழி நோக்கி
          உன்னுள் உறையும் தாழ் நீக்கி
          உனையும் உயர்த்திட 
          உலகில் உயர்ந்திட வா வா...

 7.      அகமென்று ஒன்றிருக்கு
         அதுக்குள்ளே அறிவிருக்கு
         அறியாத மூடருக்கு
         அழகாய் அழகாய் கனவெதுக்கு...

         அட்டைப் பூச்சியாய்
         அடங்கியிருக்கும் அறிவீலிக்கு
         அஞ்சும் வாழ் வெதற்கு
         அணியா நகை யெதற்கு
         அஞ்சறைப் பெட்டியிலே துஞ்சுவதற்கோ...

Saturday 8 October 2011

சமூக அநீதிகள் - லஞ்சம், அடிப்படை வசதியின்மை (உணவு மற்றும் கழிப்பறை)


A. லஞ்சம்

1.       மனிதன் பழகிவிட்டான்
          மரபுகளில் எழுதிவிட்டான்
          பொருள் கொடுத்து
          பொருள் வாங்கி
          பொருளின் பொருள் உணர்ந்துவிட்டான்...


          மனிதன் பழகிவிட்டான்
          பொருளாய் தனை எண்ணி
          பொருளுக்கு விலை போய் - காட்சி
          பொருளாய் ஆகிவிட்டான் - வீணாய்
          வீணனனாய் விட்டான்
  
2.       வஞ்சம் படைத்த உள்ளம்
          வகுக்கும் பல திட்டம்
          வற்புறுத்தி வகுப்பெடுக்கும்
          வசதியினைத் தருவது போல்
          வன்கொடுமை லஞ்சத்திறகு
          வரிசையாய் பட்டியலிட்டு - தெரியாமல்
          வறுமைக்கு வழி வகுக்கும்
  
B.   அடிப்படை வசதியின்மை

B1.  கழிப்பறை


1.         சுற்றம் பார்த்து
            நாற்றம் தாங்காமல்           
            காற்றும் மறுக்கிறது
            ஏற்றம் இல்லையே
            முற்றம் போக...

2.         கழிக்கச் சென்றேன்
            கழிக்க வேண்டியதை
            கழிக்க இயலவில்லை
            கழிப்பறையும் இல்லை
            கனிந்துவாழ வாழ்விடமும் இல்லை...

3.         கதிர் தோன்றும் கருக்காலில் 
            கருமுள் தோட்டத்தில்
            கழித்தேப் பழகிய நான்
             கழித்துவிட்டனர் கயவர்கள்
            கட்டாய நிலஅபகரிப்பில் - இப்போது
             கழிப்பிடமும் இல்லை
             கழிவறையும் இல்லை...

B2. உணவு

 1.      அரிசியில் பேரிட்டு
          அனுதினமும் படியளக்கும்
          அரிசியினைத் தேடியே
          அறுபதும் தாண்டிவிட்டது...

2.        அயராமல் உழைத்து
           அலுக்காமல் காத்திருந்து
           அரைக்காசு கூலி வாங்கி
           அடுக்களைக்கு வந்தால்
           அரிசி மட்டுமே இலவசம்
           அடுப்பிற்கு விறகு இல்லை
           அரிசி விட்டா வேறு இல்லை...

 3.        திட்டம் போட்டு
            தினம் வாழ
            திகட்டாமல் உழைத்தேனே
            தினுசாய் பெயரிட்டு
            தித்திக்கும் பண்டங்கள்
            திசை நான்கும் விற்கையிலே
            தின்ன சோறு இருக்கு
            தினிக்க வாய் இருக்கு
            தினக்கூலி பத்தலையே
            தின் பண்டம் வாங்கிடவே!!!!

4.         இலவசமாய் அரிசி வருது
            இறங்கி வாங்க வந்தா
            இம்சையாய் குடும்ப அட்டை
            இடுக்கில் கப்பலேறுது
            இருப்புக்கே வழியில்லை
            இருப்பு அட்டைக்கு எங்கே போக
            இன்னைக்கும் பட்டினி தான்
            இறுதிவரைக்கும் இந்த கதை தான்
            இலவசங்கள் சந்தையிலே 
            இளிச்சுக்கிட்டே போகுதே...

5.        ஒருத்தனுக்கு உணவில்லை 
            ஒருத்தன் சொன்னான்
            ஓங்கி உலகம் அழித்திட - இங்கு
            ஒவ்வொருத்தரும் பட்டினியிலே
            ஒவ்வொன்றாய் மடிய
            ஒருத்தரும் இல்லையே - அவன்
             ஒருவன் போல் குரல் கொடுக்க....

Friday 7 October 2011

அகந்தை விடுத்து மன்னிப்பு கோருதல் (APOLOGIZING)



1.     நான் எனும் வார்த்தை
        நாவில் வரும் போது
        நாம் மறக்கிறது
        நிலை தடுமாறும்
        உறவுகள் உருமாறும்...

        மன்னித்து மறந்தால்
        மறந்து மன்னித்தாலும்
        மறுக்காமல் ஏற்கும்
        மனம் உறவுகளை
         மகிழ்ச்சியின் தொடக்கமாய்...

2.      உள்ளம் ஒரு மாயை
         உயிர் என்றும்
         உடல் என்றும்
         உறவுகளைச் சுமந்து
         உன்னதங்களை உறையிலிடுகிறது - போலி
         உடலினை "நான்" எனப் பெயரிட்டு...

         உயிரான உறவுகளுக்கு
         உடலான உயிர்ப்புகளுக்கு
         உருமாறும் "நான்" மறந்து
         உறையிலிடும் தவறு மறந்து
         உறவிடுவோம் உறவுகளுக்கு..

3.    மனம் ஓர் மந்திரச்சாவி
       மறுதலிக்கும் அன்பர்களுக்கு
       மறுக்கும் சிலருக்கு
       மருவி, மறந்து
       மன்னிக்கும் பலருக்கு
       மன்னித்தலில் மருந்திட்டு
       மகிழ்விக்கும் உறவுகளை
       மறந்திடுவோம் "நான்" எனும் அகந்தையினை...


4.     நான் செய்த தவறு
      நானே செய்தது
      நான் மறந்து செய்தாலும்
      நான் தெரிந்து செய்தாலும்
      நானன்றி வேறில்லை
      நான் என்று செய்தது
      நானே கேட்கிறேன் - இல்லை
      நாவடக்கி கேட்கிறேன்
      நாமவோம் உறவாக....


5.    உரசிப் போனது மனதினை
       உரசிலிடத் துனிந்தது
       உறவறுக்க துடித்தது
       உயிர்ப்புகளைத் துண்டிக்க
       உரிமையோடு போராடியது
       உடலான "நான்"
       உதறிடுவீர் அகந்தையினை
       உயிரிடுவீர் உறவுகளுக்கு
       உரிமையாய் மன்னிப்பிட்டு...

6.         யார் சரியென்று
            யார் மதிப்பிட்டாலும்
            யாரும் சரியில்லை
            யாரென்ற எ(அ)வருக்கும் - ஆதலால்
            யார் என்பதை மறந்து
            யாது என்பதையும் மறந்து
            யாரானாலும் மன்னிப்போம், மறப்போம்
            யாரையும் உறவாக்கி
            யாரான உறவுகளையும் மதிப்பிட்டு...


7.      சரி யென்ற ஒருவருக்கு
         சரியல்ல மற்றவருக்கு
         சரியென்பது பொதுவிதியல்ல
         சரியாய் போவதற்கு
         சரி விடுயென்று போய்விட்டால்
         சரியாய் போய்விடும்
         சரியாய்விடும் சங்கதியும்
         சரியாய் மன்னித்து மறந்தால்
         சரியான உறவுகளை மதிப்பிட்டு....


8.      குற்றம் பார்த்து
         குறைகளையேப் பட்டியலிட்டு
         குறையிட்டு நிறைகளை
         குற்றமிட்டு காத்திருந்தால்
         குறைந்துவிடும் உறவுகளும் - ஆதலால்
         குறைகளை களைந்துவிட்டு
         குறையான "நான்" மறந்து
         குறைந்து பார்க்காமல் நிறைந்து நோக்கின்
         குறையில்லை எதுவுமே....


9.      உறவுகளை மதிப்பிட்டு
         உண்மையானாலும் தவறுகளை
         உரிமையோடு மறந்து
         உயிர் கொடுக்கிறேன் உறவுகளுக்கு
         உறுத்தும் எண்ணங்களை
         உயிரோடு புதைத்துவிட்டு
         உளமார மன்னிப்பிட்டு...

நீர், நெருப்பு


1.        கண்களில் நீர் வழிந்தோடியது
           நெருப்பாய் அவள் நினைவுகள்

 2.       மனம் பரிதவித்திக்கிறது
           மட்டற்ற மகிழ்ச்சியில்
           மடையாய் கண்களில் நீர்
           அது ஆனந்த கண்ணீர்...

3.       விழியில் வழிந்தோடும் 
          விழாமல் வீழ்த்திவிடும் - கண்களில்
          விழும்போது கண் நீர் - நெஞ்சில்
          விழும்போது அனணயா நெருப்பு

4.        நெருப்பும் நினைவுகளும் ஒன்று
           தொடும்போது சுடும்
           தொடாமல் இருந்தால்
           தொட்டுச் செல்லும்
           நீராய் கண்களில்...

5.        நிழலாய் அவள்
           நிஜமாய் நான்
           நினைவுகள் நெருப்பாய்
           நினைந்து நினைந்து
           நின்று போகிறது 
           நிற்காமல் கண்களில் 
           நீராய் வழிந்தோடுகிறது...

6.        எண்ணம் நெருப்பானால்
           எண்ணி எண்ணி 
           எளிமையாய் ஆக்கமாகும்
           எண்ணியது நிறைவேறி
           ஆழ் மனதில் நீரிடும்
           ஆனந்தமாய்...

7.        தேடலும் நெருப்புதான்
           தேடும் போது
           தேகம் சுடும்
           தேடிய பின்
           தேகம் ஆனந்தத்தில் நீராடும்...

Wednesday 5 October 2011

சிந்தைப் புரி...

எம்மக்காள் எண்ணுவோம்
தம்மக்காள் மறந்து
நம்மக்காள் வாழிட
அம்மக்காள் வாழ்த்திட....

விந்தையது சிந்திப்பதே
சிந்தையதை நிந்திப்பதே
நிந்தையது தந்திடுதே
எந்தையது உயர்ந்திடவே
சிந்தைப் புரி...

Tuesday 4 October 2011

சிந்தையெல்லாம் சிவமயமே!


கற்றது எள்ளவாயினும் அண்டியவருக்கு
கற்பித்து பழக்கமிட்டால் - தெரிந்திடலாம்
கற்க வேண்டியது உலகளவு என...

கற்றது போதுமென
கற்றதை தொலைத்திட நினைத்தால்
கற்கவில்லை எதுவுமென
கண்டிடலாம் உண்மை நிலை...

சித்தமெல்லாம் சிவமயமென்றிருந்தால்
சிந்தையெல்லாம் சிவமிருக்கும்
சிந்தித்துப் பார்த்தாலும் சிவமே முன்னிருக்கும்
சிந்தைக்குள்ளே சிலந்தியாய்
சிந்தையில் வலையிட்டால்
சிந்திக்குமோ மனமும் சிவனையே?????

உலகெல்லாம் அவனிருக்க
உலா வரும் அன்பரினை
உள்ளுக்குள்ளே வைத்திருந்து
உள்ளே நோக்காமல்
உலகத்தில் தேடலாமோ
உன்னுள் இருக்கையிலே...

எப்படி என்னுள்ளே என
எ(இ)ப்படியோர் வினாவினை
எப்படியும் மனம் கேட்கும்
எப்போதும் சிந்தித்தால்
எப்படியும் நடந்துவிடும்
எப்படியான எண்ணமும் - அதுவே
சிந்தையின் மகத்துவம்
சிந்தையின் மூலமே சிவம்
சிவமே சிந்தை....
சிந்தையெல்லாம் சிவமயமே!!!!

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...