Tuesday 18 October 2011

நாணயம்.


சில்லறை என்றே ஒதுக்கியது - இன்று
சில்லறையே ஒதுக்கியது 
சில நேரம் கிடைத்து - பல நேரம்
சில்லறையோ சிறையாகிப் போனது
சிலரின் உண்டியலாகிப் போனது....

சில்லறை வியாபாரமாகியது - இல்லை
சில்லறையில் வியாபாரமாகியது....

ரூபாய்
ஒன்றோடு ஒன்று
ஒன்றோடு ஜந்து
ஒன்றாகிப் போனது வடிவத்தில்
அதுவே எளிதாகிப் போனது...

கேட்டு கொடுக்கவோ - இல்லை
கேட்டவுடன் கொடுக்கவோ
கேள்வியாகிப் போனது
கேலியாகிப் போனது
சில்லறை வணிகமாகிப் போனது...

அரசே!
ஒற்றுமை கோரி
ஒற்றுமை தேடி
ஒற்றுமை வைத்தாயோ
ஒன்றாய் வடிவத்தில்....

அதனால் உண்டியலாகிப் போனது - இல்லை
அது உண்டியலுக்குள் போனது...

அரசே!
நீ பெரிய வியாபாரி
நீ நாணயமும் வெளியிட்டு
நீ உண்டியலையும் பெருக்குகிறாய்
நீ நாணயத்தில் வியாபாரம் காண்கிறாய் - ஆம்
அரசே நீ பெரிய தன வணிகன் தான்
சில்லறையினைச் சிறையிட வைப்பதினால்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...