Saturday 15 October 2011

தூங்கி கிடக்கும் துக்கங்கள்...


1.        வெறும் கூடு எலும்பிலே
           சதையோடு நரம்பும்
           சின்னமாய் மூளையிட்டு
           பெரிதாய் எண்ணமிட்டு
           வண்ண வண்ண கனவிட்டு
           சில நேர துக்கமிட்டு
           பல நேர நினைவிட்டு
           ஒரு நொடி சந்தோஷம்
           பல நாட்கள் காத்திடுதே
           வாழ்வினை அர்த்தமிடுதே
           வாழ்ந்து பார்ப்பாயே..

2.        அழுது அழுது என் கண்டாய்
           அழுவது வாழ்வென்றா
           துயரமாய் எண்ணியே
           துச்சமாய் மிஞ்சியே
           அச்சமாய் வாழ்ந்தே
           மிச்சமாய் வாழ்தல் வாழ்க்கையோ...

           போராட்டமில்லை வாழ்க்கை
           போராடி தோற்பதற்கோ, ஜெயிப்பதற்கோ
           வாழ்க்கை ஓர் சாலை
           யாரும் பயணிக்கலாம்
           யாருக்கும் பாதையாயிருக்கலாம்
           பயணிப்பவன் பொறுத்து...


3.         துக்கமென்ற ஒன்று தூங்கி கிடக்கு
            தூக்கமின்றி நெஞ்சில் பதுங்கி கிடக்கு
            வரும் என்று காலம் பார்த்திருக்கு
            வந்துடுமோ என துக்கம் காத்திருக்கு...

            துக்கம் பொதுவென்று நெஞ்சு மறந்திருக்கு
            நினைவு படுத்தும் எண்ணம் மறந்திருக்கு - துக்கமாய்
            நினைவே வாழ்க்கையென நினைத்திருக்கு
           அத்தனை சந்தோஷமும் மறைஞ்சிருக்கு...

            சொல் எடுத்து வரும் முன்னே
           வார்த்தை அழுகையாய் வந்திடுமோ என
           வருவதை தடுக்க பொய்யான மனசு காத்திருக்கு
           இதுவும் கடக்குமென்று உள் மனசு 
           சொல்லி சொல்லி மரத்திருக்கு
           தூண்டிவிட நெஞ்சமதை 
           தூண்டில் வரலையே...

           துக்கம் பொதுவென உணர்ந்திடு - இது
           துக்கமே இல்லையென உணர்ந்திடு
           பக்கம் வரும் முன்னே துக்கமதை
           அக்கம் பக்கம் பார்க்காமல்
           அருகாமையில் வைத்திடு
           நித்தம் அதை பாராமல்
           சுத்தமாய் மறந்திடு
           அர்த்தமாய் விடும் வாழ்க்கை தான்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...