Wednesday 19 October 2011

காதல் கடிதமே...


வந்துவிடும் என நினைத்து
வந்ததோ என நினைத்து
வந்து வந்து பார்க்கிறேன் - நீ
வந்து வந்து போனாயோ - இல்லை
வந்தவுடன் போனாயோ....

வாசல் வரை வந்து
வாசம் அதை தந்து
வாசிக்க ஆசையாய் வந்து
வார்த்தையாய் போனாயோ - என்
வாசமான வாக்கியமே!!

வரிகளில் உனை தேடி
வரிசையாய் வார்த்தைகளில் தேடி
வரிசையிட்ட வாக்கியத்தில்
வரிசையிடா என் ஆசைகளோடு....

வந்து செல்லும் போஸ்ட்மென்
வந்து செல்லும் சைக்கிள் மணி
வந்து செல்லும் காலிங் பெல்
வந்து செல்லும் காலடி ஓசை
வந்து வந்து போகிறது
உனை மட்டும் மறக்காமல்
தந்து விடாமல் செல்கிறது
என் கனவு காதல் கடிதமே!!!!!!!!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...