Wednesday 14 December 2011

ஏழ்மையின் இலக்கணம்...


உண்ண உணவில்லை ஒதுங்க இடமில்லை
உள்ளுறுப்பு எல்லாம் காற்றில் அலையாட
உடைக்கும் பஞ்சம் உடுத்தவோ அஞ்சும்
உள்ளத்தில் காதல் உயிரின் மிச்சம்...


உளம் கொண்ட காதல் சொச்சம்
உருவான உயிர்கள் அதன் எச்சம்


உயிர் உடலில் தவழ்ந்தது 
உடல் உறவால் மலர்ந்தது...


உடல் நாறி வளர்ந்தது ஆண்டோடு
உடலேறி பவணி வந்தது திருவோடு


உழைப்பு மறந்து உணர்வும் செத்து 
உயிர் வாழ்ந்து என்ன பயன்
உண்ணும் உணவு கையேந்தி
உடுத்தும் உடை கிழிசலாகி


சிந்தியுங்கள்!
ஏழ்மை தவறல்ல பிறப்பில்
ஏழ்மை தொடர்ந்தால்
ஏளனமன்றி வேறு என் சொல்ல????


ஏழ்மை கவசம் அல்ல பாதுகாக்க
ஏழ்மை இல்லாமையின் இலக்கணம் சிலருக்கு
ஏழ்மை இயலாமையின் இலக்கணம் பலருக்கு.

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...