Wednesday 14 December 2011

சொல்லடி சிவசக்தி, என்று திருந்துவரோ?


பிச்சையினைத் தொழிலாக்கி பிண்டம் உணவிற்கு
பிணமாய் வாழ்க்கை நடத்தும்
பித்தர்கள் என்று திருந்துவரோ
சொல்லடி சிவசக்தி...

வீரம் மறந்து தரம் தாழ்ந்து
வீணனாய் போன தமிழன்
வீண் பகட்டு வாழ்விற்கு
வீங்கி வயிறு பெருத்து
வீழ்தலில் என்ன சுகம் கண்டான்
சொல்லடி சிவசக்தி...

சும்மா கிடைக்குதென்று சோம்பேறியான கூட்டம்
சுதியில் லயம் கண்டரோ
சித்தம் செரிவுபெற செயலாக்கும் அரசு
சித்தம் சிதையும் தொழில் செய்யவோ
சிந்தை மயங்கி இலவசத்தில் உழன்றானோ!!!!!
சொல்லடி சிவசக்தி...


கைகட்டி வாய்கட்டி எந்நாளும் வெட்டியாய்
தமிழன் அறிவு சிதைந்ததோ வடிகட்டி
சரியா யில்லையோ வழிகாட்டி அரசு
சதியில் மயங்கினானோ தன்னைத் தாலாட்டி
சிரிக்க வாய் இருந்தும் சிரிப்பு வரலையே
இவன் நிலையெண்ணி
சொல்லடி சிவசக்தி...
என்று திருந்துவரோ????

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...