Wednesday 14 December 2011

சில்க் சில்க் சில்க் ...(ஒரு ரசிகனின் பார்வையில்)


பித்தனும் பித்தம் கொள்ளும்
பித்தமாவர் பெண் கண்டால்
பித்தமாவர் அப் பெண் கண்டால்...

சில்க், சில்க் சில்க்
சில்லிட்டது இதயம் இன்றும்
சிரித்து வெளியே சொன்னால்
சிரிக்கின்றனர் நக்கலாய்...

சிந்தித்துப் பார்த்தேன்
சிலையாய் இருந்தாளாம்
காதல் மயக்கத்தில்
கனிவோடு ரசித்து மகிழ்ந்தார்களாம்
கன்னியவள் ரசிக்கும் வரை இனித்தாளாம்
ஏனோ புரியவில்லை
ஏதோ சொல்லிக் கொண்டார்கள்

ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
எப்படி சொல்வேன் காரிகையே
நீ எழுத மறந்த ஓவியம் 
பாட மறந்த பாடல் என...

சிட்டே சிட்டு குருவியே
சினேகம் கொள்ளவும் வெட்கமிட்டனராம்
சில்லறைக்கும் இறுதியில் பஞ்சமாம்
அய்யகோ!!! ஒரு நடன மாது
ஒரு நாட்டிய தாரகை
ஒத்திகையின்றி அரங்கேறினாள்...

நாடக வாழ்க்கையில்
நடித்தே பேர் வாங்கினாள் - ஆம்
உடலும் நடிக்கும் என...

எத்தனையோ செய்தவள் பாவம்
எடுத்தெரிந்த ஆடைக்கு சித்தரிக்கப்பட்டாள்
இன்னும் வரும் படங்கள்
இறுதி வரை யார் என தெரியாமல் போகும்....
 
மூத்த கவிதை
முதிர்ந்து போனது 
வாசிக்கப் படாமலே...

வாசித்தவர்கள் சிலர் வரிகளில் தேடினர்
வாசித்தவர்கள் சிலர் வார்த்தைகளில் தேடினர் - பாவம்
வாசித்தவர்கள் எழுத்தினைக் கூட்டி படிக்கவில்லை
வாசிக்கப்படாத கவிதை சில்க்...
ஒரு ரசிகனின் பார்வையில்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...