Monday 1 June 2020

ஒரு புத்தகத்தை கையில் ஏந்துகிறேன் புத்துலகில் நீந்துகிறேன்


என்னங்க என்று அழைத்தப்படியே சங்கரி வந்தாள். அந்த ஹாலின் ஓர் ஓரத்தில் போடப் பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தப்படியே புத்தகம் படித்துக் கொண்டிருந்த கணேஷ், அவளைப் பார்க்காமலே என்ன என்று கேட்டான்.

லாக் டவுன் தளர்வுப் பற்றி இன்னைக்கு சொல்லப் போறாங்களாம், நீங்க கொஞ்சம் டீவியை போடுறீங்களா என்று சொன்னப்படியே வேகமாக ரிமோட்டைத் தேடலானாள் சங்கரி. நானும் தேடினேன் ரிமோட்டை. எப்போதும் டீவி மேலேயே வைத்திருப்போம் என்று சொன்னப்படியே சத்தம் போட்டபடி தேடிக் கொண்டிருந்தாள் சங்கரி. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு சத்தம் அவர்களை நிலைக் குலைய செய்தது. அவர்கள் இருவரும் வாசலினை நோக்கிப் போனார்கள். என்ன சத்தம் என்று கேட்டவாறே அவர்கள் இருவரும் மாடியிலிருந்து கீழே பார்த்த போது, அங்கு ஒரே கூட்டம்.

என்ன மனோகர்? என்ன சத்தம் என்று கேட்டார் கணேஷ். அதற்குள் அந்த அப்பார்ட்மெண்ட் செகரட்டரி, “எல்லோரும் கீழே இறங்கி வாங்க. யாரும் வீட்டில் இருக்க கூடாது” என்று சொன்னப்படி கூக்கரலிட்டார்.

சங்கரியும், கணேஷும் கீழே இறங்கிப் போனார்கள். அந்த வசந்தம் அபார்ட்மெண்ட் மிகப் பெரியது. கிட்டத்திட்ட 200 குடும்பங்களை 6 பிளாக்குகளாக கொண்டது. அதில் “அ” பிளாக் செகரட்டரி சொன்னது தான் சங்கரியும் கணேஷூம் கேட்டது. அதன் படி தான் அவர்கள் இறங்கி ரோட்டுக்கு வந்தார்கள்.

அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். ஏதோ ஒரு கவலை, பயம் அவர்களை ஆட்டிப் படைத்துள்ளது நன்றாகத்தெரிந்தது அவர்களி வெளிரிய முகத்தில். இவர்களும் இணைந்து கொண்டார்கள். யாரைக் கேட்பது என்ற பதட்டத்தில் இவர்கள் தவித்திருந்தார்கள். எல்லோரும் செகரட்டரியை நோக்கிய படி இருக்க. கணேஷ் மெல்ல ஆரம்பித்தான், பக்கத்தில் இருந்த நபரிடம்.

என்ன சார் ஆச்சு? ஒரே பதட்டமா இருக்கீங்க. ஏன் செகரட்டரி ஒரே கூப்பாடு போடுறார். என்று அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தான். அந்த நபர் சொன்னார், எனக்கும் தெரியல சார், நானும் உங்களை மாதிரி தான் சத்தம் கேட்டு தான் வெளியில வந்தேன். இப்போ உங்களை மாதிரி தான் பதில் தெரியாம நிற்கிறேன் என்று. கணேஷூக்கு கோபம் வந்தது. ஏன் எதற்கு என்று கேட்காமலே இப்படி நிற்கிறார்களே என்று தனக்குள் கோபப்பட்டுக்கொண்டு, நேராக செகரட்டரியிடம் சென்றான். “சார் என்னாச்சு என்று கேட்டான்”. செகரட்டரி கொஞ்ச  நேரம் சும்மா இருக்கீங்களா, நானே பதட்டமா இருக்கேன் என்று சொன்னார்.

கணேஷூக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எதற்குன்னு சொல்லாமல் நான் இங்கு நிற்க முடியாது. நாங்கள் மேலே போகிறோம். எதுவாக இருந்தாலும் எங்கள் வீட்டிற்கு வந்து சொல்லுங்கள் என்று சொன்னப்படியே நடக்கலானான். செகரட்டரி சொன்னார், பொறுப்பா, ரொம்ப கோபப்படற, இங்க எத்தனை பேர் நிற்கிறாங்க. எதாவது தொந்தரவு பண்றாங்களா? ஏன் இப்படி செய்ற என்று கேட்டார்.

கணேஷூக்கு மேலும் கோபம் வந்தது. சார் நீங்க சொல்றது என்ன விதத்தில நியாயம். என்னன்னு சொல்லாம, தெரியாம நிற்க முடியுமா? அவங்க நிற்கிறாங்கன்ன அதற்கு நானும் நிற்கனுமா? எனக்கு இப்ப காரணம் தெரியனும். சொல்லுங்க, இல்லைன்னா, நீங்க அவங்கள வச்சுக்கிட்டு என்ன செய்யனுமோ செய்ங்க, நான் மீட்டிங்கல பார்த்துக்குறேன் என்று சொல்லி புறப்படலானான். செகரட்டரி கணேஷ், கணேஷ் என்று இரண்டு முறை கூப்பிட்டார், ஆனால் அதனை காதில் வாங்கி கொள்ளாமல், பேசிக்கொண்டிருந்த அவன் மனைவி சங்கரியிடம் வந்தான். வா வா நாம் மேலே போகலாம், என்ன காரணம் சொல்ல மாட்டங்களாம், நாம வாய் பொத்திக்கிட்டு நிக்கனுமாம், நாம என்ன இவங்க அடிமையா? அதெல்லாம் முடியாது. நாம் மேலே போவோம். எதுவென்றாலும் அவங்க நம்ம வீட்டிற்கு வந்து சொல்லட்டும் என்று சங்கரியினை வேகப்படுத்தினான். அவளும் வேறு வழியின்றி, வரேன் அக்கா என்று சொல்லிவிட்டு, முனுமுனுத்தப்படியே அவனின் பின்னால் சென்றாள்.

என்னங்க, ஏன் இப்படி கோபம் படுறீங்க, என்ன ஏதேன்னு தெரியறத்துக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு. மத்தவங்க மாதிரி நின்னா என்ன குறைஞ்சிடும் என்று சொன்ன சங்கரியினை சுட்டு எரித்துவிடுவது போல் பார்த்தான் கணேஷ். ஏன் அவர் சொன்னா குறைஞ்சிடுவாரா என்று கேட்டப்படியே சோபாவில் போய் உட்கார்ந்தான். என்ன திமிரு அவருக்கு, மத்தவங்க மாதிரி நான் போய் அவங்கள மாதிரி அமைதியா நிக்கனுமா? எனக்கென்ன தலையெழுத்து? என்று புலம்பியபடியிருந்த கணேஷைப் பார்த்து முறைத்துக் கொண்டே கிச்சன் நோக்கிப் போனாள் சங்கரி.

என்ன மனுஷன் இவரு? எதற்கெடுத்தாலும் கோபம், எதற்கெடுத்தாலும் சண்டை, எதற்கெடுத்தாலும் எகத்தாளம், என்று தனக்குள் திட்டியப்படியே அடுப்பில் பாத்திரம் வைத்தாள். என்னங்க காபி சாப்பிடுறீங்களா என்று தன் கணவன் மனதை மாற்ற கிச்சனிலிருந்தே கேட்டாள் சங்கரி. கணேஷ் அப்போது தான் இரண்டாம் அத்தியாத்தியத்தில் செகரட்டரி மற்றும் பிறரைத் திட்டும் படலத்தில் இருந்தான். அவனுக்கும் காபி குடித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இருந்தாலும் முறுக்கோடு, ஏன் இப்ப என் பேச்ச மாத்தப் பார்க்குற, அந்த செகரட்டரி மனைவி எதுவும் சொன்னாளா? என்று சங்கரியிடம் கோபம் காட்டுவது போல், அவள் எதுவும் விஷயம் தெரிந்து வைத்திருக்கிறாளா என்று ஆவலில் கேட்டான் கணேஷ்.

ஏன் அது சொன்னா தான் காபி சாப்பிடுவீங்களா என்று தனக்கே உரிய நக்கலில் பதில் சொன்னாள் சங்கரி. கணேஷூக்கு கோபம் மறுபடியும் வந்தது. ஏன் நீயா சொல்ல மாட்டியா? மனுஷன் இங்க கத்தியே செத்துருவேன் போல, கேட்டா தான் சொல்லுவியோ என்று தன் பதிலை உச்சஸ்தாயில் சொன்னான் கணேஷ்.

அதுக்கு ஏன் இப்படி கத்துறீங்க, இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொன்னாள் சங்கரி. ஏன் காபி போட்டுக்கிட்டே பதில் சொன்னா என்ன குறைஞ்சிடும் என்று விஷயம் தெரியவில்லையே என்று ஆதங்கத்தில் சொன்னான் கணேஷ்.

என்ன அவசரம். இருங்க வரேன். காபி போட்டேன் இந்த எடுத்துட்டு வரேன் என்று சொன்னப்படியே ஒரு கையில் காபி டம்ளரும் மறு கையில் வட்டையும் காபியினை ஆத்திக் கொண்டே வந்தாள் சங்கரி.

வாசலில் காலிங்பெல் சத்தம், “இல்லறம் ஓர் நல்லறம்” புத்தகம் படித்துக் கொண்டிருந்த குமார். யாராக இருக்கும் என்று யோசித்தப்படியே அந்த புத்தகத்தினை மூடி வைத்து வெளியில் யார் வந்திருக்கிறார்கள் பார்க்க கிளம்பினான்.

என்ன அருமையான புத்தகம். ஓர் அழகான குடும்பம். அந்த கணவன் மனைவிக்குள் ஏற்படும் சம்பாஷனைகள் என்ன அருமையா சொல்லியிருக்கிறார் அந்த எழுத்தாளர். எதற்கு அந்த செகரட்டரி அப்படி சொன்னார். என்ன விஷயமா இருக்கும், சங்கரி என்ன சொல்லப் போகிறாள், ஏன் கணேஷ் இவ்வளவு பதட்டம்  என்று தன் மனதில் தோன்றிய எண்ணங்களோடு தான் உடுத்தியிருந்த கைலியினை சரி செய்து கொண்டு வாசல் நோக்கிப் போனான் குமார்.


Monday 4 May 2020

எழுத்துக்களின் அதிசயம் - Magic in English Alphabets - Handwriting Analysis

ஆங்கில எழுத்துக்களில் ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கிறது ஓர் அதிசயம். ஆம். நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் நம் எண்ணத்தின் வெளிப்பாடு. நம் எண்ணத்தின் சேர்க்கைகள் வடிவமெடுத்து நம்மை அறியாமலே நாம் வெளிப்படுத்தும் ஓர் அதிசயம் தான் நம் எழுத்தும், கையெழுத்தும். 

சரி, இது ஆங்கில எழுத்திற்கு மட்டும் தானா என்று கேட்டால், எனக்குத் தெரிந்தவரை ஆங்கிலமே பெரும்பாலான மக்களின் பயன்பாட்டு மொழியாகவும், எழுத்து வழி மொழியாகவும் இருந்து வருவதால், அந்த மொழிக்கே நாம் எழுதும் எழுத்தும், கையெழுத்தும் சொல்லும் மர்மமென்ன என்று அறியப்பட ஏதுவாய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன இந்த கிராபலாஜி. பிற மொழிகளிலும் இவ்வாராயாச்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. 

சரி, நாம் இப்போது ஆங்கில எழுத்துக்களில், அகர வரிசையில் முதல் 5 எழுத்துக்களின் கையெழுத்து கூற்றைப் பார்ப்போம். 

First we will see Capital Letters

1. A

இதன் வடிவமைப்பைக் கொண்டு அவர்களின் அன்பு மற்றும் பெற்றோர்களின் மேல் அவர்கள் வைத்திருக்கும் பாசத்தினை அறிய முற்படமுடியும். 

With this capital letter "A", it can be found out how much love and affected the person is and how much affection the person have with parents. 

2. B
இந்த எழுத்தின் வடிவமைப்பைக் கொண்டு அந்த எழுத்தாளரின் மூச்சு விடும் தன்மையினையும் அவரின் உடல் நலனையும் அறிய முற்படமுடியும்.

The structure of letter "B" can help the analyst to find out the health issues of the writer. 

3. C
The structure of "C" helps the analyst to find out how much interactive the writer is

இந்த எழுத்தினைக் கொண்டு அந்த எழுத்தாளர் எந்த அளவிற்கு பேசி பழக கூடியவர் என்பதை அறிய முற்படமுடியும்.

4. D
This letters helps the analyst to find out how much the writer is physically fit and and also the sensitivity of the writer

இந்த எழுத்தின் வடிவமைப்பைக் கொண்டு அந்த எழுத்தாளர் எந்தளவு உடலளவு தகுதியுடையவராகவும், உணர்ச்சிகள் உடையவராகவும் இருக்கிறார் என்று அறிய முற்படமுடியும்.

5. E
This letter helps the analyst to find out how much the writer is expresssive

இந்த எழுத்தின் வடிவமைப்பைக் கொண்டு அந்த எழுத்தாளர் எந்த அளவிற்கு அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதை அறிய முற்பட முடியும். 

இது எல்லாம் நேரடியான ஒன்று, ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு முறையும் அவர்களின் சூழ்நிலைப் பொறுத்து மாறுபடும். ஆகவே எந்த சூழ்நிலையில் அதனை எழுதினார் என்பதை பொறுத்து தான் அமையும். அது மட்டுமல்லாமல், அனைத்து எழுத்துக்களை அலசி ஆராய்ந்த பிறகே எந்த எழுத்தாளரை அறிய முற்படமுடியும். 

These are all based on general principles in handwriting analysis. This varies from situation to situation and when the writer writes that statement, it all based on that, the handwriting of the writer varies. Each and every letter has to be analyzed and on a whole, the analyst will come to a conclusion.

அடுத்த எழுத்துக்களினை அடுத்த பதிவில் காண்போம். நன்றி

Sunday 3 May 2020

கொரோனாவும் பொருளாதாரமும்


எத்தனையோ நாம் கடந்து வந்து விட்டோம், கடந்த 100 ஆண்டுகளில் நாம் கடந்து வந்த பாதைகளை நோக்கினால், நிச்சயமாக பிளேக் என்னும் கொள்ளை நோய்க்குப் பிறகு, உலகம் பல மடங்கு மாறியது, பஞ்சம் என்னும் கொடுமை கடந்து வந்த போது கூட அச்சப்படாத சமூகம், பிளேக் வந்த போதும், ப்ளு வந்தபோதும் ஆடி போனது. கிட்டத்திட்ட அன்றைய தேதியில் இருந்த மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினை இழந்தோம். நாம் எண்ணி பார்க்க முடியாத முன்னேற்றத்தில் தான் இருந்த சமூகமும், மருத்துவமும். ஆனால் அதையெல்லாம் பல விலைக் கொடுத்திருந்தாலும், கடந்து வெற்றி நடையிட்டோம், அதன் பிறகு இரண்டாம் உலகப் போர், இந்தியாவின் விடுதலை, பல் வேறு விதமான பொருளாதார சீர்திருத்தங்கள் என நடையிட்டுக் கொண்டிருந்த போது, 1991ம் வருடம் எடுத்த உலகப்பொருளாதாரம் கொள்கையும் அதன் தாக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகைப் புரட்டிப் போட்டது. விஞ்ஞான வளர்ச்சியும், தொழில் நுட்ப புரட்சியும் பெரும் அளவில் உலகை சுருக்கின. எதுவும் எட்டக் கூடிய தூரத்தில் வந்தது. நாம் அமைதியாக ஒரு புரட்சி செய்து கொண்டிருக்க, நம்மில் ஒருசிலர் இந்த உலகை ஆட்டிப் படைக்க வேறு ஒரு விதமான புரட்சியினை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.. அது தான் ஆராய்ச்சி எனும் பெயரில் பல்வேறு விதமான தாக்கங்கள். அணு ஆயுதங்கள், பல்வேறு கிலோமீட்டர் அளவு கூட நாசப்படுத்துமளவிற்கு ஆயுதங்கள், தயாரிப்பதிலும் வெறி கொண்டு வேலை செய்து வந்தனர்.
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், வல்லரசுகளையும் சேர்த்து , தங்கள் ஆண்டு பட்ஜெட்டில் கிட்டத்திட்ட 30% அளவிற்கு பாதுகாப்பு, ராணுவம் மற்றும் ராணுவதளவாடங்களுக்கு செலவு செய்தன.

நாம் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு செய்த செயல்களினால் நாம் உடனடியாக எதிர்வினைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறோம். யாரை குற்றம் சொல்வது என்பதில் இந்த பதிவு இல்லை. யாரையும் குற்றம் சொல்ல இது நேரமும் அல்ல. ஆனால் நாம் பொருளாதாரத்தைப் பற்றி பேசும் பொழுது, நிச்சயமாக இதை உணர்ந்து தான் பேச வேண்டும். இந்த வைரஸ் தாக்கத்திற்கு முன்னரே நாம் மிகவும் மந்தமான நிலையில் தான் பயணித்துக்கொண்டிருந்தோம். இந்த வைரஸ் வந்து உலகளவில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

சரி எந்த எந்த துறை உடனடியாக வெற்றி பெறும், எந்த துறையெல்லாம் நாம் பயணிக்க ஏதுவாக இருக்கும் என்று பார்த்தோமேயானால், உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள், ஆடை மற்றும் ஆடம்பரமல்லாத அத்தியாவசிய ஆடை வகைகள், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகிய துறைகள் இப்போதும், இதன் பிறகும் உடனே நமக்கு பொருளாதார வளர்ச்சியில் கை கொடுக்கும்.
மக்களின் சிந்தனை மாறியிருக்கிறது. மாறும். ஏனென்றால், நடுத்தரமும், உயர் நடுத்தரமும், உயர் வர்க்கமும் கூட தங்களின் அன்றாட தேவைகளில் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இது நெடும் கால திட்டமிடலுக்கு வழி வகுக்கும். ஆதலால் எதிர்கால திட்டமிடல் வைத்திருந்தால் இந்த துறை சார்ந்து பயணியுங்கள். வெற்றி நிச்சயம்.

அடுத்த இரண்டாவது துறைகள் என்று பார்த்தோமேயானால்
தற்காலிக சேமிப்பு, நிரந்தர சேமிப்பு, சிறு மற்றும் குறு தொழில்கள் ஆகியவை மீது மக்களுக்கு கவனம் செல்லும். இந்த நேரம் அவர்களின் அஸ்திவாரத்தினை ஆட்டிப்பார்த்ததால், அவர்கள் இதை நோக்கி தான் பயணம் செய்ய தூண்டும். சேமிப்பு என்பது நகையாகவோ அல்லது Mutual Fund, SIP, SEP, Etc ஆகியவற்றில் கூட இருக்கலாம். இவை அனைத்தும் நடுத்தர, உயர் நடுத்தர மற்றும் உயர் குடும்பங்களுக்கான எண்ணங்களாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கணிப்பு. ஆகவே இதை சார்ந்த துறைகளில் உங்கள் எதிர்கால திட்டமிடல் இருந்தால் வெற்றி பெறலாம்.

ரியல் எஸ்டேட் துறை உடனடியாக ஏற்றம் பெறும் நிலையில் இல்லை, என்ன தான் அரசு போராடி அதை தூக்கி நிலை நிறுத்த முயன்றாலும், அதில் உடனடியாக மாற்றம் இருக்கப்போவதில்லை. சரி விலை குறையுமோ, விற்று விடலாமா என்று எல்லாம் உங்களை குழப்பி கொள்ளாதீர்கள். மிகப்பெரிய வீழ்ச்சியினை எதிர் கொண்டாலும் அது எல்லாம் தற்காலிகமே. வருந்த வேண்டாம். அதிக பட்சம் 6-12 மாதங்களில் இந்த துறை இப்படி தான் இருக்கும், விலை பாதாளம் நோக்கி செல்லும். பயந்து விட வேண்டாம். அதன் பிறகு அதன் வளர்ச்சி பெரும் பங்கு வகிக்கும். இழந்ததை மீட்பீர்கள், இது உறுதி. ஏனென்றால், மேற் சொன்ன துறைகளின் வளர்ச்சி, கட்டுமானத்தினைச் சார்ந்திருப்பதால், நிச்சயம் இந்த துறை எழுச்சி பெறும்.

தங்கம் வாங்கலாமா? தங்க பத்திரம் வாங்கலாமா? என்று யோசித்தீர்களேயென்றால், நிச்சயம் தங்கப் பத்திரம் வாங்கலாம். தங்கத்தின் விலையில் பெரிய அளவிற்கு மாற்றமிருக்கும் அதுவும் தற்காலிகமே, 80000 வரை செல்லும் ஒரு சவரன் என்று சொல்லக்கேட்டிருப்பீர்கள், எனக்கென்னவோ அப்படி தோன்றவில்லை, ஒரு சவரன் 50,000-60,000 வரை செல்லலாம், ஒரு வேளை நாம் ஜூன் மாதத்திற்கு பிறகு நிலைமை சரியாகி விட்டது என்று வைத்துக்கொண்டோமேயானால், வரும் ஜூன் 2021 வரை இப்படி ஏற்றத் தாழ்வுகள் தங்கத்தின் விலையிலிருக்கும். இதன் விலை மறுபடியும் இப்போதிருக்கும் விலைக்கே வரலாம். ஆகையால் குறுகிய கால முதலீடு, குறுகிய கால லாபம் பெற நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் பிற துறை சார்ந்து கேள்விகள் கேளுங்கள் நான் எனக்குத் தெரிந்தவரை பதில் சொல்கிறேன்

ஓர் புத்தகத்தின் பயணம் – ஹிட்லர் - ஆய்வு அவரின் கையெழுத்து – பகுத்தாய்வு



ஓர் சுங்க அதிகாரியின் மகனாகப் பிறந்த ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்தாலும், தன் பிழைப்பிற்காக வந்த ஒரு நாட்டின் தலைமகனாக மாறி, இரண்டாம் உலகப் போர் வர காரணமானவராக உருமாறியது அனைவரும் அறிந்த ஒன்று.

நல்ல கலை ரசனை உள்ள ஒரு மனிதர், ஓவியத்தில் சிறந்து விளங்கினார். ஆஸ்திரியாவின் ஆர்ட் அகடாமியில் தான் பயில வேண்டும் என்று அதற்கு விண்ணப்பித்து இரு முறையும் தோல்வியுற்றவர். பிழைப்பிற்காக ஓவியம் வரைந்து அதன் மூலம் பொருளீட்டினார் ஹிட்லரின் ஆரம்ப கால பயணமாக விவரிக்கிறது இந்த புத்தகம்.

அம்மாவின் மேல் அலாதி பிரியமும், அவரின் தந்தையின் கண் மூடித்தனமான கண்டிப்பில் வளர்ந்ததையும் விலாவரியாக விவரிக்கிறது. அவரின் தந்தை நாய் போல் அவரை நடத்தியதை நினைத்து பார்க்கும் போது நமக்கே கொஞ்சம் அச்சமாகத் தான் இருக்கிறது. விசிலடித்தால் வந்து நிற்க வேண்டும், பெயர் சொல்லி அழைக்கமாட்டாராம் அவர் தந்தை. இளமை காலங்களில் அவரின் பயணம் மிகப் பெரியளவில் அவருக்கு மன நிறைவையோ சந்தோஷத்தினையோ தரவில்லை. அவரின் தந்தையின் மறைவிற்குப்பிறகு அவரின் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். அவரின் ஓவிய கல்வி ஆசை அப்போது தான் துளிர்விட்டது. ஆனால் அவரின் முயற்சிகள் கூடவில்லை. ஒரு வேளை, அன்று அது நடந்திருந்தால், இன்று நாம் டேவின்சி, பிக்காசோ வரிசையில் ஹிட்லரையும் நினைவு கூர்ந்திருக்கலாம். காலம் அவருக்கு வேறு வேலை வைத்திருந்தது.

அவரின் தாயார் மறைவிற்குப் பிறகு சிறிது காலம் தந்தையாரின் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து வந்தாலும், அவருக்கு அது போதவில்லை, ஆகவே அவர் ஜெர்மனி நோக்கிப் பயணித்தார். அவர் சென்ற நேரம் அப்போது தான் முதலாம் உலகப்போர் தொடங்கிய நேரம். ஜெர்மனி ராணுவத்தில் அவர் “ரன்னர்” ஆக அவருக்கு வேலை கிடைத்தது.

அதாவது போர் நடக்குமிடத்தில், தகவல்களை தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கும், வீரர்களுக்குமிடையே கொண்டு சேர்ப்பது. என்ன அதிசயம், குண்டு மழை பொழிந்த அந்த சூழ்நிலையிலும் அவர் திறம்பட அந்த வேலை செய்தார். அப்போது உயில் போயிருந்தால், இன்றும் அவர் ஓர் போர் வீரராக மட்டும் நினைவு கூறப்பட்டிருப்பார்.

யுத்தம் முடிந்தது. ஜெர்மனி சரண் அடைந்தது. போரில் மஸ்டர்ட் என்ற கெமிக்கல் வாயுவினால் அவரின் ஓர் கண் தாக்கப்பெற்று அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த தோல்வி விஷயம் அவரை நிலைகுலைய செய்தது. அவர் இதற்கு காரணம் யூதர்கள் என்று சொல்லி, அவர்களை அழிப்பதே தன் பணி என்று சூளுரைத்தார். முதன் முறையாக அவரின் நாட்டுப் பற்றினையும், அவரின் யூதர் எதிர்ப்பினையும் பதிவு செய்ததாக விவரிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

போர் காலத்தில் அவரின் பணியினையும் அவரின் திறத்தினையும் பாராட்டி, ஜெர்மன் ராணுவம் அவருக்கு ”Iron Cross” என்று பதக்கம் வழங்கியது. சிகிச்சை முடிந்த வந்தவர் அப்போது புதிதாக தொடங்கியிருந்த “நாஜி” கட்சியில் சேர்ந்தார், பின்னாளில் உலகமெல்லாம் அந்த இரண்டு எழுத்துக்கள் முழங்கப்பட போவதை யார் அறிந்திருப்பர். முதல் பொது கூட்டம் அந்த பேச்சு அவரை சிகரத்தில் நிறுத்தியது. ஜெரமானியர்களே ஆள தகுதியானவர்கள் என்ற அவரின் கூக்குரல், பேச்சு ஜெர்மானியர்களின் இதயங்களை அசைத்துபார்த்தது.

தோல்வி மேல் தோல்வி, அரசுக்கு அவர் கொடுத்த தொந்தரவு, ஆட்சியாளர்களின் மேல் அவர் பொழிந்த தாக்குதல் அவரை சிறை வாசமிட செய்தது. ஐந்து ஆண்டுகள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஓராண்டானது. அந்த சிறைவாசம் அவரை செம்மைப்படுத்தியது. அந்த நேரத்தில் அவர் எழுதிய புத்தகம் ”Mein Kampf” ”எனது போராட்டம்” அவரின் எண்ணங்களை விலாவரியாகச் சித்தரித்தது. அவரின் ஆசைகள் பிரதிப்பலித்தன. அவர் அன்று எப்படி இந்தியா பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்ததோ, அது போல் ரஷ்யா ஜெர்மனியின் ஆதிக்கத்தில் வரவேண்டும் என்று விரும்பினார், என அவரின் சிறை வாசம் மற்றும் அவரின் அரசியல் பயணம் பற்றி விலாவரியாக விவரிக்கிறார் இந்த புத்தகத்தின்ஆசிரியர்.

மீண்டு வருகிறார். தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் தோல்வி, ஆனால் நாஜி கட்சியின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. ஆகையால் ஆட்சியில் சான்ஸ்லர் பதவி கிடைக்கிறது. இது தலைவருக்கு அடுத்த பதவி. ஆனால் அதிகாரம் குறைக்கப்படுகிறது. சில காலங்களில் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தில், இவருக்கு அன்றைய அதிபர் பெரும் அதிகாரங்களை வழங்குகிறார். சிறிது காலத்தில் அதிபர் இறக்க, இவரே முடிச் சூள்கிறார். தேர்தல் முறை ரத்து செய்யப்படுகிறது.

இவரின் முதல் 5 ஆண்டு கால ஆட்சி காலம் பொற்காலம் என சொல்லலாம். ஆம் ஜெர்மனி, தன் முதல் உலகப்போர் தோல்வி, நாட்டில் சீர் குலைந்து போயிருந்த பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, சொல்லி கொள்ளும் அளவிற்கில்லாத இராணுவம் என முடங்கிப் போயிருந்த நாடு, இவரின் முதல் 3 ஆண்டு கால ஆட்சி காலத்தில் சர்வ வல்லமை மிகுந்த இராணுவ நாடாகவும், வேலை வாய்ப்பு குறையில்லா நாடாகவும் உருமாறியது என்று சொன்னால் மிகையாகாது. படிக்காத இவர் தன் அரசாங்கத்தில் நன்கு கற்ற மேதைகளை பணியமர்த்தினார். ஆபாசம், கேளிக்கை என சர்வாதிகாரிகளின் முழக்கமாகவும், வாழ்வாகவும் இருந்த போது, இவர் முற்றிலும் வேறுபட்டார், பெண்களை மதித்தார், மது அருந்தாத ஒர் அதிபராக இருந்தார். இவரால் ஜெர்மனி வல்லமை மிகுந்த நாடாக பயணித்தது.

இவரின் யூதர்களின் மேல் உள்ள வெறுப்புணர்ச்சி சிறிதளவும் குறையவில்லை. இவர் கொன்று குவித்த யூதர்களின் அளவு சொல்லிவிட முடியாது. நாட்டில் உள்ள மக்களையும் அவ்வழியே நடக்க இவர் செய்தது தான் இவரின் உச்ச கட்டம். எங்கும் யூதர்களின் எதிர்ப்பு குரல். ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் யூதர்களை விதவிதமாக கொன்று குவித்தார்கள்.

இவர் உலகை ஆள நினைத்து அண்டை நாடுகளின்மீது யுத்தமற்ற முறையிலும், தனது ராஜதந்திரத்தாலும் போர் புரிந்து நாடுகளை கைப்பற்றினார். ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளோடு நட்பு பாராட்டி ரஷ்யாவையும், யூதர்களையும் அழிக்க இவரின் முயற்சி தொடர்ந்தது.

ஏப்ரல் 27ல் பிறந்த இவர், தனது இறுதி பிறந்த நாளை கொண்டாடியது ஓர் மறைவு குகையில். ரஷ்ய படைகள் பெர்லினை ஆக்ரமித்தன, எந்நேரமும் இவரை கைது செய்ய வரக்கூடும் என்பதை உணர்ந்து, அவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தினையும், தனது அன்பு காதலியையும் மனந்தது அந்த மறைவிடத்தில் தான். அந்த கடைசி நிமிடத்திலும் அவர் முழக்கமிட்டது, ஒரு போதும் நான் கைதியாகப் போவதில்லை. எனது சொத்துக்கள் அனைத்தும் கட்சிக்கும், அப்படியில்லையேல் நாட்டிற்க்கும் என்று உயில் எழுதியதோடு, மக்களுக்கும் ஓர் சாஸனம் எழுதினார். இந்த போர்  என்னால் ஏற்பட்டதில்லை, யூதர்களால் மட்டுமே என்று கடைசி தருவாயிலும் முழக்கமிட்டார் என அழகாக முடிகிறது இந்த புத்தகம்.

ஓர் கலைஞன், கலை ரசிகன், நல்ல பண்பாளனின் பயணம் எப்படி மாறிப் போனது என்பதை அழகாக விவரிக்கிறது இந்த புத்தகம். தனது கடைசி நொடியிலும் தன் அம்மாவின் புகைப்படத்தினை கட்டிப்பிடித்தப்படி தற்கொலை செய்து கொண்டவர், பெண்களின் மேல் மிகுந்த மரியாதையை வைத்திருந்தவர். அவரின் யூத வெறுப்பு மற்றும் வெறி அவரின் வாழ்க்கைப் பாதையினை மாற்றியமைத்தது. ஒரு வேளை அவர் தனது முதல் 5 ஆண்டு கால ஆட்சிகாலத்தில் இறந்து போயிருந்தால், உலகம் ஓர் சாதனையாளராக அவரை போற்றியிருக்கும். எண்ணற்ற கண்டுபிடிப்புகள் அந்த காலத்தில் தான் ஜெர்மானியர்கள் செய்யப்பட்டது. வோக்ஸ்வேகன் கார் ஓர் சிறந்த உதாரணம்.

காலம் தான் எப்படி விளையாடுகிறது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும். ஓர் கலைஞன் இன்று ஒரு கொடுங்கோலனாகவும், ஈவு இரக்கமற்ற மனிதராகவும் சித்திகரிக்கப்படுகிறார்.

சரி இவரின் வாழ்க்கைப் பயணத்தினைப் பார்த்த நாம், இவரின் கையெழுத்துப் பயணத்தினையும் பார்ப்போம்.




தொடக்க காலத்தில் அவரின் கையெழுத்து ஏதோ தேடலில் இருந்தாலும், மனதில் இனம் புரியாத ஓர் சோகத்தினை கொண்டிருந்தது. அது அவரின் ஆரம்ப கால அல்லது இளமை கால சோகமான வாழ்க்கை முறையினால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். அவரின் 12 ஆண்டுகால ஆட்சி கால கட்டத்தில் அவரின் கையொப்பத்தினை பார்த்தால், எளிதாக விளக்க முடியும். அவரின் கையெழுத்து மாறுபட்டுக் கொண்டேயிருந்தது. அது அவரின் எண்ணங்களின் பிரதிப்பலிப்பு. உயிரோட்டமிகுந்த அவரின் எழுத்துக்களில் உயிர் குறைந்து கொண்டே போனது பிற்காலத்தில். அவர் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக யூதப்போரில் பலியிட்டுக் கொண்டிருந்தார். தெளிவான கையெழுத்து அவரின் இறுதி கட்டத்தில் அவரின் தற்கொலை நாள் அன்று வெறும் புள்ளியில் முடிகிறது. மனதின் ஓட்டம், ஆட்டம் எவ்வாறெல்லாம் அவரின் கையெழுத்தில் பிரதிப் பலிக்கிறது என்பதை நன்கு காண முடிகிறது.

இன்னொரு நாளில் இன்னொருவரின் கையெழுத்தினை நாம் ஆராயலாம். நன்றி, வணக்கம். 

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...