Tuesday 16 August 2016

இங்கே எனக்காக என்னுயிரே????

எங்கே யுமில்லாத காணாத காதலை
என்னைத் தேடும் உலகில்
உன்னைத் தேடும் ஜீவன் நான்
என்னுள் உன்னைத் தேடி தேடி
உன்னுள் நானே தொலைகிறேன்...
வந்தாயோ என் அருகில் நீ
தந்தாயோ உன் வாசம் தான்
வந்தாயோ கனவில் தான்
தந்தாயோ உன் நினைவும் தான்…
சிந்தையில் உனை நினைத்து
விந்தையில் லயிக்கிறேன் உயிரே
சிந்தையாய் வந்தாயோ தந்தாயோ
விந்தையாய் என் உயிரானாயோ….
காதலற்ற ஒரூயிர் நான்
காத்திருக்கும் காதல் பறவையானேன்
காதலாய் வருவாய் என
காத்திருக்கும் தூர தேசன் நான்…
மூச்சாய் இருப்பவளோ நீயென
முயற்சிக்கிறேன் முடியாத காதலை
மூச்சாய் நீயிருந்து பயணிக்க
முயற்சி திருவினையாகுமோ….
எங்கே நீயென வினாவோடு விடைக்காக
இங்கே நீவருவாயோ தருவாயோ
எங்கே யுமில்லாத காணாத காதலை
இங்கே எனக்காக என்னுயிரே????

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்
என்னைப் பார்த்து பார்த்து
என்னுள் மறையும் நேரம்
என் முன்னே நீ கடக்க
எனக்குள் ஏதோ மாயம் செய்தாய்…
நொடியில் மறைந்தாலும்
நொடிக்கொரு முறை உன்னைத் தேடி
நொடிமுள்ளை சபிக்கிறேன்
நொடியெல்லாம் உன் நினைவாக…
பார்த்தாய் சிரித்தாய் பேசினாய்
பார்த்து பார்த்து மாய்ந்து போனேன்
பார்க்காமல் மரத்துப் போனேன்
பார்க்க பார்க்க சளைக்காமல் நீ….
பேசும் ஒரு வார்த்தைக்கு
பேசாமல் மௌனம் காத்தேன் பலரோடு…
எனக்காக நீ தந்தது சிரிப்பு தான்
உனக்காக என்னையே தர காத்திருந்தேன்
உனக்குத் தெரியுமா
உன்னை நீ மறந்தாலும் நான் மறவேன்….
எப்படி முடிகிறது உனக்கு
என்னை இம்சித்துவிட்டு மனதார
எனக்கே தெரியாமல்
என்னுள் பயணம் செய்ய…
நான் மட்டும் ரசித்ததை
நான் மட்டும் சுவைத்ததை
நான் மட்டும் கேட்டதை
நான் மட்டுமே ரசிக்கிறேன் தனியாக….
நீ நான், நான் நீ
எத்தனை முறை எழுதியிருப்பேன்
எழுதும்போதெல்லாம் அருகில் இருந்தாய்
எழுதும் வரை ரசித்திருந்தாய்
எங்கே போனாயோ என் அருமை காதலே…
தூர போனாயோ தூரத்திற்கு போனாயோ
தூரமிட்டாலும் இன்றும் அருகிலே
தூக்கத்திலும் கனவாக பயணிக்கிறாய்…
இமைக்கும் நொடியில் சொல்ல நினைத்து
இதயத்தில் இறுதிவரை சுமக்கிறேன்
இன்பமாய் இருந்ததை
இருளில் புதைத்தேனே மனதோடு…
நண்பர்களே!!!
வேண்டாம் சொல்லாத காதல்
வேண்டாம் என்றாலும் சொல்லிடுங்கள்
வேண்டாததை சுமக்க வேண்டாமே….
ஒரு தலையாய் சுமந்து
ஒருவராய் மடிவதை விட
ஒவ்வொருவரும் பகிர்ந்திடுவோம் காதலை
ஒரு சாரர் சொந்தமல்ல காதல்

இலக்கற்ற பயணம்

இலக்கற்ற பயணம் - ஓர்
இழிவான பயணம்..
தேடித் திரியும் பறவைகள்
தேடலில் சோர்வதில்லை 
தேடியது கிட்டும் வரை
இலக்கின் நோக்கம் மாறுவதில்லை...
நீ யார்?
தேடிப்பார் தேடலில் கிட்டும்
விடையல்ல, இன்னும் பல
விடைதெரியா புதிர்கள்...

அன்னையர் தின வாழ்த்து


கருவில் உருவாகி உயிரை உருவாக்கும்
கருவின் கருவே கண்ணே கண்மணியே
கருத்தாய் உனைவைத்து எழுத்தால் வருடுகிறேன்
கடவுள் நீயென உலகில் உணர்கிறேன்...
பத்து திங்கள் கருவில் சுமந்து
பஞ்சாய் உணர்ந்து பரிவாய் நினைந்து
பதார்த்ததிலும் பத்தியமிட்டு பாசமாய் உள்ளுக்குள்ளே
பரிவோடும் பரவசமோடும் உதிரமோடு உயிரிட்டு...
உள்ளேயே உருவமிட்டு ஆண்/பெண் வடிவமிட்டு
உறுப்புகள் ஒவ்வொன்றும் உன் வயிற்றுனுள்ளே
உல்லாசமாய் வளரவிட்டு சுதந்திரமாய் கட்டுக்குள்ளே
உறவாய் உன் உறுப்புகளோடு உலாவர....
மாதமோ பத்தானது உன்னைக் காண
மாதக்கணக்கில் தவமிருந்து மடியில் தவழ்ந்து
மாறும் உலகில் வெளிச்சமோடு இருளும்
மாறாத உன் உலகிலிருந்து காணவருகிறேன்...
எட்டி உதைத்த போதும் நகைத்தாய்
எள்ளி நகையாடிய போதும் நகைத்தாய் - உனை
எண்ணி நானிருக்க விக்கிட்டு நீரிட்டாய்
எப்படியிருப்பாய் நீயென ஆவலோடு வருகிறேன்...
நீ யாரென எனக்குத் தெரியாது
நீயோர் உயிரிட்டு உணவிடும் உத்தமன்(மி)
நீ என்னை ஈன்றெடுக்க உன்னைத் தந்தவள்
நீ எப்படியிருப்பாய் ஆவலோடு வருகிறேன்...
அந்த நிமிடம் வந்தது வெளிச்சமோடு
அணு அணுவாய் வெளியேறுகிறேன் உனைவிட்டு
அசுர வலியினையும் எனக்காகத் தாங்குகிறாய்
அயராமல் உனை வதைத்து வெளியேறுகிறேன்...
கண் கூசுகிறது நாசி நானுகிறது
கலைந்த உடல் உதிரமோடு வெளியேற
கருவறை சுகம் காற்றோடு மறைந்தது
கண்ணே, நீ தானா அந்த கடவுள்....
தாயே, அன்னையே, அம்மாவே
தரணியில் வந்துதுதிக்க வித்திட்டவளே
எப்படி சொல்வேனோ என்னவென்று சொல்வேனோ
என்னை வெளியிட
உன்னைக் கொடுத்த என்
அன்னையே - வணங்குகிறேன்
உன்னையே...

என் பார்வையில் கபாலி

ரஜினியின் படம், என் ஆதர்ச கதாநாயகனின் படம். பல வருடங்களுக்குப்பிறகு திரையரங்கில் பார்த்த படம், நிச்சயம் பாராட்டுக்களே.
ஒரே பாடலில் பல கோடி அதிபதியாகாத படம். தொடங்கும் போதே மிரட்டலாய் காட்ட நினைத்த படம்.
எதையும் எதிர்பார்க்காமல் படத்தினைப் பார்த்தால் படம் சலிக்காது.
ஒரு வேகமான கதாப்பாத்திரத்திற்கு திரைக்கதையில் வேகம் கொடுத்தருக்கலாம்.
இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரஜினியும் மாற்றப்பட்ட படம், அவரின் அடுத்தப் படங்களில் வரப்போகும் மாற்றங்களை முன்னிறுத்தும் படமாக இது அமையும்.
படத்தின் ஒரே வெற்றி, எங்கு நோக்கினும் """மகிழ்ச்சி""".
பிரம்மாண்டமான விளம்பரத்திற்கு, ரஜினி ஒன்றைத் தவிர, திரைக்கதையும்இல்லை, திரைப்படமுமில்லை.
அயராத உழைப்பு படத்தில் இழையோடுகிறது, அங்கே, அங்கே. அதற்கு வாழ்த்துக்கள். படத்தினை திறனோடு எடுக்க சிரம்மேற்கொள்ளாமல், ரஜினி விளம்பரத்தில் சரி கட்ட நினைத்த மற்றுமொரு படம்.
மகிழ்ச்சி வெறும் வார்த்தையில் மட்டுமே....

கவிஞர் நா. முத்துகுமார்....14/08/2016

ஓர் கவிதையின்
புனித நிரந்தர பயணம்
சென்று வா தமிழே...
இலக்கணத்தின் நீண்ட பயணம்
இறுதியில் இயற்கை உரைத்த
பாடம்
இனியும் காலம் வருமோ
இனியவனின் பாடல் வரிகள்
இனிதாய் காதோரம் இசைக்க...
விழி மூடிப் பார்க்கிறேன்
விடியாத இரவுகள் சிரித்தப்படி
விரியும் உன் வரிகளில்
விடியாமல் ரசித்தேப் போகிறதோ..
நண்பா!!!
தமிழின் சாபம் இது...
வானில் கேட்கலாம்
இடியும் மின்னலும்
இனி உன் வரிகளில்
எம்மைத் தழுவலாம்....
நினைத்துப் பார்க்கிறேன்
நீயில்லாத தமிழினை
முடியவில்லையே.......
முற்றுப்பெறாத முற்றுப்புள்ளி
முடியாத உன் வரிகள்
முடியாத கனவு நாயகனே....
கண்ணதாசன் சொல்லியது போல்
"எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை""" - ஆம்
நீ வரிகளில் வாழபோகிறாய்
உடல் துறந்து
உணர்வுகளில் இனிமேல்...
நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்
நினைவில் நின்று கேட்கிறேன்
நீயிட்ட வரிகள் ரீங்காரமாய்
-----
சாவே!!!!
போதும் உன் பசி...
-----
நீயில்லாத திரையுலகம்
நீயில்லா இசை
நினைத்துப் பார்க்கிறேன்
அலையற்ற கடல் போல
அன்னையற்ற சிசு போல....
-----
வரிகளில் உறவானவனே
வரிகளில் உணர்வானவனே
வரி வரியாய் கொல்கிறதே
வந்து விடு எனக்காக
வசதியாய் தருகிறேன்
என் உயிரை....
------

என் இளைய தலைமுறையே!!!

இந்த எழுபதாம் சுதந்திர தினத்தன்று உன் சகோதரன் உன்னோடு பேசுவதில் மற்றற்ற மகிழ்ச்சி…
உன்னோடு தான் தினம் என் பயணம், ஆனாலும் உன்னை எனக்குத் தெரியாது, என்னை உனக்குத் தெரியாது. தினம் பால்வீதியில் நட்சத்திர கூட்டங்களோடு நிலா வீதியுலா வருவது போல் நாமும் கலந்தே பயணித்து தனிமையாகுகிறோம். சுதந்திரம் எனும் பெயரில், கேட்டதை, பார்த்ததை, சொன்னதை மீண்டும் மீண்டும் மனனம் செய்து ஒப்புவிக்க பயில்கிறோம் தடையின்றி. உலகம் தோன்றியது முதல் இது வரை எண்ணற்ற உயிர் தோன்றினாலும், ஒரு சில ஆயிரங்களே சரித்திரத்தில் இடம் பெற்றனர், ஏன் தெரியுமா?. அந்த ஏன் என்ற கேள்வியின் பதில் அது. ஆம், கேட்டதன் விளைவு, கேள்வியின் வீர்யம், உள் நோக்கி பார்த்ததன் விளைவு, தனித்து விட்டது, அவர்களை உலகிற்கு தனித்து விட்டது, தனி முத்திரை பதிக்க விட்டது.
ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொன்றைக் கற்றோம், அந்த ஒவ்வொன்றின் பயன்பாட்டினை என்றாவது உணர்ந்திருப்போமா?, இல்லை அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்தோமா?. இன்று வரை மாறாதது எது தெரியுமா?, அடிப்படையில் பயிலும் ஆரம்ப கல்வி தான். ஆம்!, நாம் ஆரம்ப காலத்தில் கற்ற கல்வி, அதாவது தொடக்க கல்வி தான் மாறாதது. ஒருவர் தன் பிஞ்சு வயதில் கற்கும் கல்வி, ஆழ்மனதில் பசுமரத்தானிப்போல் படிந்து விடும். உம். 1+1, எந்த கால கட்டத்திலும் 2 தான். அது போல் பல கற்றோம், அதனை காலப்போக்கில் நாம் மறக்க நினைத்தாலும், நம்மை மட்டும் அகலாது. ஏனென்றால், நம் அன்றாடப் பயன்பாட்டிலும் அது ஊறி விட்டது. அது போல தான் இளமை கல்வியும். ஆழ படியுங்கள், ஆழ்ந்து படியுங்கள். ஆராய்ந்து படியுங்கள். காலப்போக்கில் நாம் நம்மை உணராமல் பயில முயலும் எதுவும் நம்மோடு பயணிப்பதில்லை. அது அந்த கால கட்டத்தோடு முடிந்து விடுகிறது.
நீ மனனம் செய்யாதே!!!. ஆழ்ந்து கற்க முயற்சி செய். பயிற்சி செய் அல்லது முயற்சி செய். தவறு செய். காலப்போக்கில் உன் தவறுகள் உனக்கே ஒரு புது பாதையினைக் கொடுக்கும். சொல்ல முடியாது, இது வரை கற்று வந்தததை விட உன் பாதை எளிமையாகவும், தரமாகவும் கற்க உதவலாம். அது உன்னைப் போல், என்னைப் போல் இருப்பவர்களுக்கு உதவலாம்.
முடியாது என்ற ஒன்று மட்டும் தான் இன்று வரை முடியாமல் இருக்கிறது. முயற்சி செய்யாததால் அது முடியாமல் இருக்கிறது.
ஒரு உண்மை சொல்லட்டுமா!! நிறைய தோல்விகளைச் சந்தித்துப் பார், உன்னை வெல்ல யாராலும் முடியாது. ஒவ்வொரு தோல்வியும் உன்னைச் செதுக்கும். உன் கையிலிருக்கும் உளி, உன்னுள்ளேயே விளையாடும், உன்னையறியாமல் செப்பனிடும்.
இங்கு கற்றுத் தரும் ஆசிரியர்கள் யாரும் ஆச்சார்யர்கள் இல்லை, முன்பு போல் கற்றுத் தர, அதே போல் கற்கும் நீங்களும் (நாமும்) ஏகலவைன் அல்ல. ஆனால் கல்வி கற்பது என்னவோ அன்றும் இன்றும் என்றும் அதே தான். கற்றுக் கொள்பவன் காலப்போக்கில் மாறியதால் கற்பிப்பவனும் மாற வேண்டிய சூழ்நிலை. உன்னைப் புடம் போட வேண்டுமானால் நீ தீயில் உறுகித் தான் ஆக வேண்டும். எந்த அளவிற்கு உன்னை அதில் லயிக்கிறாயோ அது தான் உன் வெற்றியின் அளவு. உன்னை இந்த உலகில் நிலைநாட்டும் அளவு.
புலிகள் வாழும் காட்டில் தான் புள்ளி மானும் வாழ்கிறது. ஆகையால் திருடர்களும், ஏமாற்றும் பித்தர்களும், போலி உறவுகளும், நயவஞ்சக கூட்டம் வாழும் இந்த உலகில் தான் நீ வாழ்ந்து ஜெயிக்க வேண்டும். புள்ளி மான் புலி கண்டு அஞ்சினாலும், உணவருந்தாமலோ, நீர் அருந்தாமல் இல்லை, அதன் வாழ்க்கை முறையினைத் தொடர்கிறது. ஒரு போதும் அஞ்சி துவழ்வதில்லை.
ஒன்று மட்டும் நினைவில் கொள், எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும், இன்னமும் வந்து போகும். வெற்றியினைத் தலைக்கு ஏற்றாதே, தோல்வியினை நெஞ்சில் சுமக்காதே. ஒரு போதும் உலகில் இரவு மட்டும் நிலைப்பதில்லை, சூரியக் கதிர்கள் ஒவ்வொரு இரவினையும் துளைத்தெடுத்து ஒளி தருகிறது. அது போல் உன்னுள் உறங்காமல் உள்ளேயே உரமிடு, உதிரமிடு, உயிரிடு, முயற்சித்தால் முடியாததும் முடிந்துவிடும்.
நம் முன்னோர்கள் விதைத்த இந்த நாடு, ரொம்பநாட்களாய் உரம் தேடி அலைகிறது. இளைய சமுதாயமே!!! நீயே விதையாகு, உன்னுள்ளிருக்கும் ஒவ்வொரு விருட்சமும் இந்த உலகைப் பசுமையாக்கட்டும்.. பசுமை புரட்சி செய்வீராக….
ஒரு விதையிடு, அதை மட்டும் கவணம் கொள், அதை வனமாக்க இந்த உலகம் தயாராய் இருக்கிறது. வசப்படும் தூரம் தான் வானம். வல்லூறுகளைக் கண்டு கலங்காதே. வல்லூறுகளைப் பார்த்து பயந்திருந்தால், இன்று வல்லூறுகளைத் தவிர வேறு பறவையிருந்திருக்காது. உயரப் பறப்பதால் (இருப்பதால்) மட்டும் ஒருவன் வெற்றி பெற்றவனில்லை, உயர்ந்தாலும், எத்தனை உயரம் போனாலும், தன்னிலை மறவாதவன் எவனோ அவனே வெற்றியாளன். ஆகையால் பணிவு கொள்.
உயர்த்திவிட ஏணிகளைத் தேடாதே. இங்கு ஏணிகளும் விற்பனைக்கே. உள்ளொன்று வைத்து புறம் பேசும் கூட்டம் அதிகம், ஆகையால் கவணம் கொள். உன்னை உறிஞ்சி மகிழும் பேதைக் கூட்டம் அதிகம், விழிப்போடிரு. உன்னை மூளைச் சலவை செய்து அவர்கள் கார்யம் சாதித்துக் கொள்ளும் கூட்டம் அதிகம், பக்குவமாய் பயணம் செய். உன்னோடே பயணித்து உன்னை உதைத்து வெளியேற்றும் அட்டைகள் அதிகம், ஆகையால் நிறம் பார்த்து பழகு, பயணி.. எதிலும் விழிப்போடிரு. நன்றிக்கும் விலை பேசும் உலகமிது.
காலத்தோடு பயிர் செய். பொழுதெல்லாம் உனதாக்கு, எல்லா நாளும் நன்னாளே!!! நம்பி பயணம் செய்.. நம்பிக்கையோடு பயணம் செய். உன்னை மட்டும் நம்பு.
உனக்காக பாரதத்தாய் காத்திருக்கிறாள். உன்னை அள்ளிப் பருகி, அரவணைத்துச் செல்ல துடிப்போடு உயிர்ப்பித்துக் கொள்ள காத்திருக்கிறாள். வீறு கொண்டு வா, வெற்றிகளை உனக்கு காணிக்கையாக்க காத்திருக்கிறது இந்த பூவுலகம்.
வாழ்க பாரதம்! வளர்க அதன் புகழ்! வந்தேமாதரம்!

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...