Wednesday 28 December 2011

துடைத்தெடு


கண்
துடைக்கும் அந்த ஒரு விரலையும்
துடைக்காத ஒன்பது விரலும் கொண்டு
துடைத்தெடு உன் கவலையை
துடைத்தெடு உன் சோம்பேறித்தனத்தை
அடைந்திடலாம் பத்(து)தாத வெற்றியினை
சேர்த்திடலாம் அகலாத புகழ்தனை...

வீழ்ந்தவன் எழுவது எப்போது???


வீசும் பார்வையிலோர் கள்ளத்தனம்
வீசி சென்ற பாவையோ ஒரு கணம்
வீசி விட்டு விடைப்பெற்றாள்
வீச்சிலே வீழ்த்தி விட்டாள்
வீழ்ந்தவன் எழுவது எப்போது???

தேடி வந்த காதல்


தேடி வந்த காதல்
நாடி வந்தது எனை நோக்கி
சேடி சேதி சொன்னாள்
வாடி நின்றேனே
பாடி பறந்தாளே...

விழியாளே!!!


விழியாலே அவளுரைத்தாள்
விழியாள் பார்த்து
விழி முழித்து நின்றேன்
விழி முழித்ததால் - என்
தாழிட்டு மூடியது வாயும்
நாழியும் அவள் நினைவாய்...

தேயும் அவள் கனவு


தேயும் அவள் கனவு
தேயவில்லை அவள் அழகு
தேய்ந்ததென்னவோ என் நினைவு தான்
என எப்போது புரியும்...

நிலவு வான் போற்றும் உன்னதம்
நீயோ வான்/நான் போற்றும் உன்னதம்

இருப்பே நீயாக


கருவிழிப் பாவை கண்ணுக்குள்ளே
கண்ணே நீயாக
கண்மணியும் நீயாக
உயிரும் நீயாக...

இடம் தேடி செல்ல வேண்டாம்
இருப்பிடம் தேவையில்லை
இருப்பே அவனிடம் எனும் போது...

குருட்டுப் பார்வை


பார்வையில் குறையில்லை
பார்வையோ குறைவு தீர்க்கமில்லாமல் - அப்
பார்வையின் பெயரே குருட்டுப்பார்வை...

தமிழ் ஒரு அருமையான காதலி


தமிழ் தமிழ் தமிழ்
தனக்கென்று ஒன்றுமில்லை
தனக்கென யார் கேட்டாலும் குறைவதில்லை
தனக்கென யார் கொடுத்தாலும் மறுப்பதில்லை...


தமிழ் ஓர் அருமையான காதலி
காதலித்துப் பாருங்கள்...

ஏன் என்னையே பார்க்கிறாய்???


எதையோ நினைத்து சிரித்தேன்
எது அன்று அறியுமுன்னே
என்னிட்டு சிரித்தேன்
எனக்குள்ளே நான்
என அறியாமல் போனாயோ!


ஏங்கித் தவிக்கிறேன்
ஏக்கத்துடன் பார்க்கிறேன்
ஏளனமாய் சிரிக்கிறது
ஏறிட்டுப் பார்த்த கண்ணாடி
ஏன் என்னையே பார்க்கிறாய் என்று???


மயங்கித் திரியும் உறவு கூட்டம்
மந்தையாக்கி விந்தை செய்யும் சில நேரம்
மந்தமாய் மூளையும் மரத்துப் போகும்...


மனிதன் மனதில் வேடமிட்டு
வெளியில் ஒப்பனையிடுகிறான் நிஜத்தில்...

தோல்வியும் வெற்றியும்


தோல்வி விழும் விதை
வெற்றி எழும் விருட்சம்
விதையின்றி விருட்சமில்லை
விருட்சத்திற்கு வானமே எல்லை...

எண்ணிப் பார்க்கிறேன்...


எண்ணி எண்ணி பார்க்கிறேன்
எண்ணத்தில் நீயிருந்து
என்னுள்ளே பயணிக்கிறாய்
எனக்கே தெரியாமல்..

கனவே கலையாதே!!!


நிஜங்களின் நிழல்கள் நினைவுகள்
நிஜங்கள் கலப்படமாகிவிட்டன
நிழலான நினவுகளும் கலப்படமாகிவிட்டன
நித்தம் தொடர்கிறேன் மாசற்ற கனவுகளில்...

கனவே கலையாதே

யோசனை


யோசித்து எழுதிவிட்டீர்
யோசித்தது எது என தெரியாமல்
யோசித்து யோசித்து
யோசனையே யோசனையானது
யோசனையா கவிதையின் கருவானது - உங்கள்
யோசனையின் வெற்றி... 

சிந்தித்துப் பார்


உள்ளே சிந்தித்து
உள்ளேயே உரம் வைத்து
உள்ளேயே எண்ண மூட்டி
உள்ளேயே அடைகாத்து
உள்ளேயே பொறித்துவிட்டால்
வெளியே தணலாய் வெளிச்சமிடும்
எண்ணத்தின் வலிமை அதுவன்றோ
எண்ணத்தின் வலிமையே நம்பிக்கையன்றோ தோழா!!!

சிந்தித்து பார்!!!
சிறகொடிந்த பறவை இறந்து விட்டதா
காலொடிந்த விலங்குகள் மரித்து விட்டதா
இதுவும் கடந்து போகும்
எதுவும் நடக்கும்
முன்னிட்டு நடையிடு - ஆம்
முன் வைத்து நடையிடு...

வலி

வலி மறந்து வலிக்கிறது
வலியின் வலி உணராததால்
வலியின் வலி தெரியாது
வலியின் வலி உணரும் வரை
வலியின் வலி புரியாது
வலியின் வலி வலிப்பதில்லை
வலியின் வலி உணரும் போது
வலியென்று இருந்து விடாதீர்
வலியோடு சொன்னாலும்
வலிமையோடு சொன்னாலும்
வலி வலி தான்...

சுனாமியே எச்சரிக்கை..


சில வேடிக்கை மனிதர் இல்லை நாம்
சீற்றமான அலைகளை சிறைப்பிடிப்போம்
சீறும் பேரலைகளை சிறகொடிப்போம்
சீண்டிப் பார்க்காதீர்...

சிலையாய் போனோம் அன்று
சீற்றத்தின் கொட்டம் அடக்க
சீறிப் புறப்பட்டோம் இன்று
சீண்டாதே அலையே...

சீக்கிரமே கண்டிடுவோம்
சீறும் அலையே உனை
கடலுக்குள்ளேயே நிறுத்திடுவோம்...

சுனாமி அலைகள்


விட்டுக் கொடுத்தது மனிதம்
விடாமல் துரத்துது அலை
விடைத் தேடி வந்தனவோ
வினாக்களை விட்டு விட்டு சென்றனவோ...

மிருக பூதம் அடக்கி
மிஞ்சும் மனிதம் யாரோ
பிஞ்சிலே விதைத்த விதை
பிண்டத்தில் கலந்ததே...

மிருகமோடு மனிதமும்
மனிதமோடு மிருகமும்
மின்னலாய் மடிந்து சென்றது
மிருகம் இறந்தது நியாயம்
மனிதம் இறக்கலாமோ
கூறீர்...

ஒரு நாள் வந்து
ஒவ்வொரு நாள் செய்தியானதே!!!

ஒரு நாள் வந்து
ஒரு வாழ்வே புதிரானதே!!!

ஒரு நாள் வந்து
ஒரு உலகில் நாசமிட்டதே!!!

ஒரு நாள் தானே என
ஒரு நாள் விட்டது மனிதம்
ஒரு நாள்
வாழ் நாள் செய்தியானதே!!!

Wednesday 14 December 2011

என் கவிதை புத்தகம்...


புத்தகத்தில் எல்லாம் இருந்தது
புரட்டிப் பார்த்தனர் சிலர்
புரட்டிப் படம் பார்த்தனர் பலர்
எழுத்து அச்சேறி இறந்து போனது....

கவிதை வாசிக்க
கவிஞர் தேவையில்லை
கலைநயம் போதும் என்றேன்
அந்த நயம் எங்கு கிடைக்கும்
அற்புத புத்தகம் வந்தது
அதுவும் விற்று தீர்ந்தது - என்
கவிதைப் புத்தகம் உறங்குகிறது
என்னைப் போலவே அடக்கமாக...

சில்க் சில்க் சில்க் ...(ஒரு ரசிகனின் பார்வையில்)


பித்தனும் பித்தம் கொள்ளும்
பித்தமாவர் பெண் கண்டால்
பித்தமாவர் அப் பெண் கண்டால்...

சில்க், சில்க் சில்க்
சில்லிட்டது இதயம் இன்றும்
சிரித்து வெளியே சொன்னால்
சிரிக்கின்றனர் நக்கலாய்...

சிந்தித்துப் பார்த்தேன்
சிலையாய் இருந்தாளாம்
காதல் மயக்கத்தில்
கனிவோடு ரசித்து மகிழ்ந்தார்களாம்
கன்னியவள் ரசிக்கும் வரை இனித்தாளாம்
ஏனோ புரியவில்லை
ஏதோ சொல்லிக் கொண்டார்கள்

ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
எப்படி சொல்வேன் காரிகையே
நீ எழுத மறந்த ஓவியம் 
பாட மறந்த பாடல் என...

சிட்டே சிட்டு குருவியே
சினேகம் கொள்ளவும் வெட்கமிட்டனராம்
சில்லறைக்கும் இறுதியில் பஞ்சமாம்
அய்யகோ!!! ஒரு நடன மாது
ஒரு நாட்டிய தாரகை
ஒத்திகையின்றி அரங்கேறினாள்...

நாடக வாழ்க்கையில்
நடித்தே பேர் வாங்கினாள் - ஆம்
உடலும் நடிக்கும் என...

எத்தனையோ செய்தவள் பாவம்
எடுத்தெரிந்த ஆடைக்கு சித்தரிக்கப்பட்டாள்
இன்னும் வரும் படங்கள்
இறுதி வரை யார் என தெரியாமல் போகும்....
 
மூத்த கவிதை
முதிர்ந்து போனது 
வாசிக்கப் படாமலே...

வாசித்தவர்கள் சிலர் வரிகளில் தேடினர்
வாசித்தவர்கள் சிலர் வார்த்தைகளில் தேடினர் - பாவம்
வாசித்தவர்கள் எழுத்தினைக் கூட்டி படிக்கவில்லை
வாசிக்கப்படாத கவிதை சில்க்...
ஒரு ரசிகனின் பார்வையில்...

எண்னம் போல் இதயம்


ஒரு இதயம்
சுருங்கி விரிகிறது...

சுருங்கச் சொன்னால்
உள்ளேயே விரிந்து மூடுகிறது..
எங்கிருக்கிறது வாழ்க்கை என்றாய்
எண்ணிப்பார் சுருங்கும் போது புள்ளியாகிறது
எதுவும் அதிலிருந்து தொடர்கிறது
எதையும் விரித்தால் அழகாகிறது 
எண்ணம் போல் இதயமாகிறது....

சொல்லடி சிவசக்தி, என்று திருந்துவரோ?


பிச்சையினைத் தொழிலாக்கி பிண்டம் உணவிற்கு
பிணமாய் வாழ்க்கை நடத்தும்
பித்தர்கள் என்று திருந்துவரோ
சொல்லடி சிவசக்தி...

வீரம் மறந்து தரம் தாழ்ந்து
வீணனாய் போன தமிழன்
வீண் பகட்டு வாழ்விற்கு
வீங்கி வயிறு பெருத்து
வீழ்தலில் என்ன சுகம் கண்டான்
சொல்லடி சிவசக்தி...

சும்மா கிடைக்குதென்று சோம்பேறியான கூட்டம்
சுதியில் லயம் கண்டரோ
சித்தம் செரிவுபெற செயலாக்கும் அரசு
சித்தம் சிதையும் தொழில் செய்யவோ
சிந்தை மயங்கி இலவசத்தில் உழன்றானோ!!!!!
சொல்லடி சிவசக்தி...


கைகட்டி வாய்கட்டி எந்நாளும் வெட்டியாய்
தமிழன் அறிவு சிதைந்ததோ வடிகட்டி
சரியா யில்லையோ வழிகாட்டி அரசு
சதியில் மயங்கினானோ தன்னைத் தாலாட்டி
சிரிக்க வாய் இருந்தும் சிரிப்பு வரலையே
இவன் நிலையெண்ணி
சொல்லடி சிவசக்தி...
என்று திருந்துவரோ????

ஊழல்


ஊழல் ஊழல் ஊழல் ஊழல்
எங்கு பார்க்கினும் ஊழல்...

பின்னே பார்க்கிறேன் வந்த பாதையிலும்
முன்னே பார்க்கிறேன் உள்ள பாதையிலும்
என்னே நானே நொந்து போகிறேன்
தன்னே தானே வெந்து சாகிறேன்....

கொடுத்து கொடுத்து என் கரம் கருத்தது
எடுத்து எடுத்து சிரம் தாழ்ந்தது இதை
விடுத்து மனம் பிறழ மறுத்தது அதை
தொடுத்து உடல் ஊசி நாறியது...

இனியும் கொடுக்க மாட்டேன் என
எப்போது சபதம் எடுப்பது????

ஏழ்மையின் இலக்கணம்...


உண்ண உணவில்லை ஒதுங்க இடமில்லை
உள்ளுறுப்பு எல்லாம் காற்றில் அலையாட
உடைக்கும் பஞ்சம் உடுத்தவோ அஞ்சும்
உள்ளத்தில் காதல் உயிரின் மிச்சம்...


உளம் கொண்ட காதல் சொச்சம்
உருவான உயிர்கள் அதன் எச்சம்


உயிர் உடலில் தவழ்ந்தது 
உடல் உறவால் மலர்ந்தது...


உடல் நாறி வளர்ந்தது ஆண்டோடு
உடலேறி பவணி வந்தது திருவோடு


உழைப்பு மறந்து உணர்வும் செத்து 
உயிர் வாழ்ந்து என்ன பயன்
உண்ணும் உணவு கையேந்தி
உடுத்தும் உடை கிழிசலாகி


சிந்தியுங்கள்!
ஏழ்மை தவறல்ல பிறப்பில்
ஏழ்மை தொடர்ந்தால்
ஏளனமன்றி வேறு என் சொல்ல????


ஏழ்மை கவசம் அல்ல பாதுகாக்க
ஏழ்மை இல்லாமையின் இலக்கணம் சிலருக்கு
ஏழ்மை இயலாமையின் இலக்கணம் பலருக்கு.

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...