Wednesday 28 December 2011

சுனாமி அலைகள்


விட்டுக் கொடுத்தது மனிதம்
விடாமல் துரத்துது அலை
விடைத் தேடி வந்தனவோ
வினாக்களை விட்டு விட்டு சென்றனவோ...

மிருக பூதம் அடக்கி
மிஞ்சும் மனிதம் யாரோ
பிஞ்சிலே விதைத்த விதை
பிண்டத்தில் கலந்ததே...

மிருகமோடு மனிதமும்
மனிதமோடு மிருகமும்
மின்னலாய் மடிந்து சென்றது
மிருகம் இறந்தது நியாயம்
மனிதம் இறக்கலாமோ
கூறீர்...

ஒரு நாள் வந்து
ஒவ்வொரு நாள் செய்தியானதே!!!

ஒரு நாள் வந்து
ஒரு வாழ்வே புதிரானதே!!!

ஒரு நாள் வந்து
ஒரு உலகில் நாசமிட்டதே!!!

ஒரு நாள் தானே என
ஒரு நாள் விட்டது மனிதம்
ஒரு நாள்
வாழ் நாள் செய்தியானதே!!!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...