பெண்ணே!
சுமப்பதால் சுமை என்றாயோ - இல்லை
சுமந்ததால் சுமை என்றாயோ...
சுமை சுமப்பதில் இல்லை தெரியுமா
சுமை எண்ணத்தில் இருக்கிறதாம்
சுமை தத்துவம் விஞ்ஞானம் சொல்கிறது...
சுமை தூக்கும் உழைப்பாளியும்
சுமை தூக்கும் கழுதையும்
சுமையான பழுதூக்கும் வீரனும்
சுமை தூக்குவது எளிதாக பயிற்சியில்
சுமை தூக்கலாம் எண்ணத்தின் வலிமையில்...
சுமையல்ல தோழியே!
சுமக்கிறதாம் எறும்பு 800 மடங்கு
தன் உடலின் எடையை விட
அது தெரியுமா?
பெண் ஓர் உன்னதம்
சுமப்பதால் தாயாகிறாள்
சுமந்ததை உயிர்ப்பிப்பதால் கடவுளாகிறாள்...
பெண்ணே!
தயவு செய்து சுமையாக்காதே
சுமை என சொல்லி
உனை நீயே கழுதையாக்காதே...
பெண்ணே!
தயவு செய்து சுமையாக்காதே
சுமை என சொல்லி
உன் சிசுவை நீயே பொதியாக்காதே!
பெண்ணே!
படைப்பின் உன்னதம் நீ
பெட்டையாக்கி பேதைக் கொள்ளாதே...
பெண்ணே!
உலகின் உயிர்துடிப்பு நீ
உலகின் உயிர்நாடி நீ
நன்றாக இதயத்தில் கேட்டுப்பார்
தென்றல் காற்றினை மொழியாக்கி
உன் பெயர் சொல்லி மகிழ்கிறது...
அலையின் சத்தம்
அம்மா என சொல்லி
உனைத் தேடி வருகிறது தெரியுமா?
நீர் வீழ்ச்சியும், நீரோடை நீரும்
காற்றின் அசைவில் இலைகளும்
ரீங்காரமிடும் வண்டுகளும்
பெண்ணே!
அம்மா என அழகாச் சொல்கிறதே
அறியாயோ நீயும்
கேட்டுப்பார் இதயத்தோடு ஒவ்வொருமுறையும்...
உலகின் உன்னதம் பெண்
உலகின் நிரந்தர தத்துவம் பெண்...
No comments:
Post a Comment