Sunday 8 January 2012

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 2


வாயெ ல்லாம் சிரிப்பு வெச்சு
வார்த்தையெ ல்லாம் அன்பு வைச்சு
வாசல் வந்து வாய்நிறைய அழைச்சாக
வாஞ்சையான சொல்லெடுத்து செட்டிநாடு பாஷையிலே...

ஆச்சி அக்காவும் ஆத்தா அம்மாவும்
ஆசையாய் ஆயாவும் அப்பத் தாளும்
ஆயாவோடு அய்யாவும் அய்த்தான் மச்சானும்
ஆசையாய் அழைச்சாக அன்பான வீட்டுக்குள்ள

தம்பு தம்பியும் சின்னவள் தங்கையும்
தன் பங்கு அன்போடு அழைச்சாக...

முகப்பு வளைவினிலே முழுசாய் நிற்கையிலே
முகப்பு நிலையே கவிதை பலசொல்லும்
முகப்பு உத்திரமும் தொங்கு சரவிளக்கும்
முகப்பழகே முகவரியாம் பல வீட்டிற்கு...

முகப்பு திண்ணையிலே அய்யாவும் கணக்கரும்
முகச் சிரிப்பில் முழுமையாய் அழைச்சாக
முகப்பு முடிஞ்சா பெருசா முற்றமாம்
முகப்பும் முற்றமும் முழுநீளக் கதைசொல்லும்...

முற்றம் வான் பார்த்து இருக்கும்
முற்றத்தின் ஓரத்திலே துளசி மாடம்
முற்றம் சுற்றியே அடுக் அடுக்காய்
முற்றத் தினோரத்தில் அழகாய் அறைகள்...

முடிஞ்சத்துன்னு பார்த்திருந்தா சமையல் கட்டு
முக்கால் சமையலறை மீதமோ உணவறை
முழுசாய் சொல்ல தனிகவிதை வேண்டும்
முழுசும் முடிக்க ஓர்நாளும் வேண்டும்...

முகப்பு திண்ணையிலே ஒய்யாரமாய் ஊஞ்சலிலே
முகம் கழுவி கால் கழுவி
முக மலர அமர வைத்து
முதல் பானம் ஆரம்பம் காபியோடு...

இன்னும் தொடரும் - அடுத்தது உணவு உபசரிப்பு...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...