Monday 16 January 2012

திருமணம் பாகம் - 1


ஒன்றாய் தான் பிறந்தோம்
ஒன்றாய் தான் வளர்ந்தோம்
ஒன்றாய் காலம் இருந்தது
ஒவ்வொன்றாய் இருந்த நாம்...

ஒன்றோடு ஒன்று பற்று வைத்தோம் சிலர்
ஒன்றோடு ஒன்று மோகம் கொண்டோம் சிலர்
ஒன்றை கடத்த முயன்றோம் ஒன்றாகி
ஒன்றில் முடியாததை இரண்டில் முயற்சித்தோம்....

ஒன்றில் ஒன்றி போயினர் சிலர்
ஒன்றில் ஒன்றைத் தேடினர் சிலர்
ஒன்றை வைத்து ஒன்றைத்தேடினர் சிலர்
ஒன்றுக்காக ஒன்றாய் தேடினர் சிலர்..

ஒன்றில் ஒன்று சேர்ந்து இரண்டானது
ஒன்றில் சேர்ந்ததால் பல உருவாயின அந்த
ஒன்றில் தானே உலகமே லயித்திருக்கு
ஒன்றுக்காகத் தானே உலகமே இயங்கியிருக்கு...

இரண்டில் மனம் போராடும் வேரோடு
இரண்டில் மனம் துடிக்கும் உயிரோடு
இரண்டில் மனம் சிதையும் உணர்வோடு ஆனால்
இரண்டில் மட்டுமே உலகம் இயங்கும்....

இரண்டில் இருவர் இல்லை ஒத்த மனமே
இரண்டில் இருவர் இல்லை ஒத்த உளமே
இரண்டில் இருவர் இல்லை ஒத்த உயிரே
இரண்டில் இருவர் இல்லை யோசியுங்கள்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...