Tuesday 10 January 2012

செட்டிநாடு நோக்கி – கவிதை பாகம் 5 (கடைசி பாகம்)

செட்டி யாரென்று வரலாறு பார்த்தால்
செட்டு என்றால் வணிகம் என்றும்
செட்டு என்றால் சிக்கனம் என்றும்
செப்பினவோ பழம் பாடல்கள் நிறையாக…

சாத்தனாய் முதல் மூன்று நூற்றாண்டுகள்
சாத்தன் எனப் பெயரிட்டனரோ வணிகரை
சாத்தன் மருவி தேசியெனப் பெயரிட்டனரோ
சான்றாய் பாடல்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில்…

எட்டியாய் மருவினரோ பாண்டிய காலத்தில்
எட்டியெ ன்றால் வணிகமும் கப்பலோடு
எட்டாத தூரமெல்லாம் எட்டிப் பார்த்தனரோ
எட்டாத பொருளெல்லாம் ஈட்டி மகிழ்ந்தனரோ…

பொருள் கொடுத்து பொருள் வாங்கி
பொருளாய் பர்மா தேக்குகள் கதவுகளுக்கோ
பொருளாய் பெல்ஜியம் கண்ணாடிகள் பார்த்திடவோ
பொருளாய் பிரெஞ்சு பீங்கான் சாமான்களோ…

வீணாய் பொருள் வாரி யிடார்
வீணாய் பொருள் வாங்கி யிடார்
வீழும் உடம்பு உள்ள வரை
வீழாது இவர் கொடை உலகமெல்லாம்…

ஆண் மகவு பிறந்திட்டால் ஒருபுள்ளி
ஆண் புள்ளி கணக்கிட்டால் இவருலகம்
ஆதி பகவன் ஆலய பணி
ஆதரவாய் செய்திடுவர் ஆர்வமாய் இருந்திடுவர்…

செட்டிநாடு பரப்பளவோ 657 சதுரமைல்கள்
செட்டியார் சேவையோ உலக மெல்லாம்
செட்டிநாடு குலமரபு கோவில்கள் ஒன்பதாம்
செட்டியார்கள் தொழுதிடுவர் மரபு வழியெல்லாம்..

செட்டிநாடு கிராமங்களோ எழுப்பத்திறாய் குறைந்தனவாம்
செட்டிநாடு கிராமங்கள் மாறினவோ நகரமாய்
செட்டிநாடு அமைந்தனவோ கீழைக் கடற்கரையில்
செட்டிநாடு சொல்லிடுமோ பல கதையெல்லாம்…

செட்டிநாடு வாருங்கள் ஆலயங்கள் கண்டிடலாம்
செட்டிநாடு வாருங்கள் உபசரிப்பில் மகிழ்ந்திடலாம்
செட்டிநாடு வாருங்கள் உணவுகளை ருசித்திடலாம்
செட்டிநாடு வாருங்கள் தொன்மையில் மயங்கிடலாம்

செட்டிநாடு நோக்கி வாருங்கள் தோழமைகளே!!!!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...