Sunday 8 January 2012

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 1


ஆறுமாசம் காத்திருந்து ஆறுதலாய் பார்த்திருந்து
ஆறுமாசம் போனதேம்மா வேகமா நாட்காட்டியில்
ஆசையாய் பார்க்க ஆகும்திட்டம் போட்டேன்
ஆருயிர் நண்பன் ஆவலோடு அழைத்தமைக்கு...

அலைந்து திரிந்து அலுவல் அலுத்து
அசைந்தும் அசையா உடல் பெருத்து
அட்டைப் பெட்டியில் அத்தனை கனவும்
அடுக்கி அழகுப் பார்த்து அடங்கிட்ட நானும்...

ஆயிரம் மைல் கடந்து ஊர்ந்து
ஆயிரமாயிரம் மனிதர்கள் கடந்து ஏறி
அடுக்கிய பெட்டியில் அணிவரிசையில் அமர்ந்து
அடுத்த ஊர் ஆத்தங்குடி என கனாகண்டு...

புகையிட்ட வண்டியில் புகையோடு மனதும்
புகையிட்டது உதடுகள் ஜன்னலோரம் குளிரில்
புத்தம்புது மனிதர்கண்டு புத்துயிர் பெற்றேன்
புதுதெம்பு யான் பெற்று புகுந்தேன் கனவினில்...

திங்கள் மதி நிலா வானில் பவணிவர
திகட்டாத பழசான நினைவுகள் நெஞ்சில்வர
தித்திக்கும் மனதோடு திளைத்து உறங்க
திருச்சி வந்தது திரும்பவும் தொடர்ந்தது...

அந்த ஊர் செட்டிநாடு பலகையோடு
அடுத்த ஊர் ஆத்தங்குடி என இறங்க
அந்த நாளும் இந்த நாளும் அன்பாய்
அக்கறையாய் அழைத்திட அனுப்பிய கார்...

ஊர் போகும் பாதையெல்லாம் மனையாச்சு
ஊர் வந்தும் தெரியலையே விளைபயிரும்
ஊர் வந்தது காதோடு குரல் இல்லையே
ஊர் ஆத்தா சொல்வாளே வாய்நிறைய் வாஎன்று...

ஊர் வந்தது ஊதி சென்ற புழுதிமட்டும்
ஊர் பேர் சொல்லி சென்றது மாறாமல்
வீதி வந்தது வாப்பா மகராசா
வீதியில் வரும் வார்த்தையில்லையே காதோடு...

வீதி முற்றி வீடும் வந்தது
வீதி வந்த கார் மட்டும் ஹாரன் அடித்தது
வீடு வந்த நண்பன் வாரி அழைக்க
வீடு வந்த மகிழ்ச்சியில் நான் திளைக்க...

வீடு முழுதும் காட்சிகள் நிழற்படமாய்
வீடு மட்டும் நாலு தெரு மொத்தமாய்
வீடு பார்க்க ஆகும் நாளும் கூட
வீட்டுக்குள்ள இருப்பவரோ காப்பவர் மூன்று...

இன்னும் பாக்கியிருக்கு.. தொடரும்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...