Sunday 22 January 2012

சுகமான சுமைகள் - பாகம் 2 (பெண்)


பெண்ணே!
உன் படைப்பில் தான்
உலகம் தினம் துளிர்கிறது
உன் உன்னதத்தில் மலர்கிறது....


நீ சோர்ந்து போனால்
உலகம் வாடி போகும் பார்த்திருக்கிறாயா
தினம் மலரும் மலர்
மலராவிட்டால் பூஞ்சோலை ஏது...


பெண்ணே!
நீ ஆனந்த கண்ணீரிட்டால்
மழையாய் பூமி ரசிக்கிறது
நீ அழுது கலங்கும் போது
சுனாமி பேரலைகளால் 
உன் கண்ணீரினைத் துடைக்கிறது பூமி...


பெண்ணே!
உன் கோபக் கனல் தானே
கதிரவன் அக்னிநட்சத்திரமாய் எரிக்கிறான்
உன் மிளிரூட்டும் பார்வையில் தானே
நிலா குளிர்கிறது மனதோடு...


பெண்ணே!
ஒப்பீடு வெறும் வார்த்தை அல்ல
ஒப்பீடு உணர்வுகளின் குவியல்கள்...


பெண்ணே!
உன்னை ஒப்பிட்டு உலகம் ரசிக்கிறது
உன்னை மட்டுமே ஒப்பீட முடிகிறது
உலகில் அனைத்திற்கும் - ஆம்
உலகின் அற்புதம் நீ
உலகின் ஆனந்தம் நீ..

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...