Monday 16 January 2012

ஆண்டாள் காதல் நவிழ்ந்தாளோ!!!!

தண்டாய் தாமரை மலர் போல்மேனி
நீண்டாய் காதல் கொண்டு அதனால்
வண்டாய் மலர் மாலை சுற்றி
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

கண்டாள் காதல னாய் கண்ணனை
செண்டாய் மலர்மாலை தனை சூடி
கொண்டாள் காதல் மோக மிட்டு
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

வேண்டி விரும்பி யிருந்தன ளோ
ஈண்ட பிறவியின் பயன் பெறவோ
அண்ட மறிய விரத மிருந்தாளோ
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

வண்டாடும் மலர் சோலைப் போல
திண்டாடும் மனதெல்லாம் பாகன் நினைப்பாலே
கொண்டாடும் நிரலெ ல்லாம் உயிர்த்தாளே
ஆண்டாள் காதல் மலர்ந்தனளோ

அண்டிட காதல் அவன் பாலே
வெண்டிட காதல் அவன் மேலே
நவிண்டிட பாவையும் காதல் மொழியாலே
ஆண்டாள் காதல் நவிழ்ந்தாளோ

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...