Monday 16 January 2012

திருமணம் பாகம் - 3


விருப்பம் யாதென கேட்டேன் அவர்களிடம்
விருப்பம் யாதெனில் எனக்கு பிடித்தென்றான்
விருப்பம் யாதெனில் எனக்கு பிடித்தென்றாள்
விருப்பம் இரண்டாய் போனதால் விரும்பவில்லையோ...

விருப்பம் தனித்து ஒருவனுக்கோ ஒருவளுக்கோ
விருப்பம் சேர்ந்தே வரும் சிலநேரம்
விருப்பம் வரும் தன்னாலே ஆசையினால்
விருப்பம் விரும்புதலின் ஆரம்பம் சிலருக்கு...

விருப்பம் பிரிவுகளின் ஆரம்பம் பலருக்கு
விருப்பம் யாதெனில் விரும்புதலும் அடைதலும்
விருப்பம் நிறைவேற தியாகங்கள் வேண்டும்
விருப்பம் நிறைவேற சிலபல வேண்டும்...

விருப்பம் அடைதலில் இருந்தால் விரும்புமோ
விருப்பம் அடையா விட்டால் வெறுக்குமோ
விருப்பம் உதட்டோடு கொள்ளாமல் உளதோடு
விருப்பம் இருப்பின் எண்ணம் எளிதாகும்...

விருப்பம் அடைதலின் இன்பமே விட்டுக்கொடுத்தல்
விருப்பம் இருவரில் ஒருவரின் விருப்பம்
விருப்பத்தோடு விட்டுக் கொடுங்கள் விரும்பியவர்க்கு
விருப்பம் நிறைவேறும் விட்டுக்கொடுத்தவருக்கு தன்னாலே..

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...