Tuesday 10 January 2012

செட்டிநாடு நோக்கி - கவிதை பாகம் 4


மணியாகிப் போச்சு மதியமும் முடிஞ்சது
மதிய உணவே உண்ட மயக்கம்
மணிக்கணக்கில் கிறங்கி அடிச்சதே ஆச்சி
மதியம் முடிந்தது மாலை வந்ததே...

மாலை என்னவேணும் ஆச்சி பட்டியிலிட
மனோலம் மாவுருண்டை எடுத்து வரட்டுமா
மசாலா சீயத்தோடு இனிப்புசீயமும் தரட்டுமா
மகிழம் புட்டோடு அரிசிபுட்டு தரட்டுமா...

கவுனிஅரிசி தட்டுல வச்சு தரட்டுமா
கந்தரப்பம் கல்கண்டு வடையோடு தரட்டுமா
கருப்பட்டி பணியாரம் செஞ்சு தரட்டுமா
கனிந்து உருகவைக்கும் கொழுக்கட்டை தரட்டுமா...

அதிரசம் சுட்டு தட்டோடு தரட்டுமா
அப்பமோடு தேங்குழல் வெச்சு தரட்டுமா
அல்வா கோதுமையில செஞ்சு தரட்டுமா
அல்வா பீட்ரூட்லயா கேரட்டுல வேணுமா..

இது எல்லாம் சாப்பிட நாளாகும்
இதுக்கு அப்புறம் சாப்பிட மாளாது
இதுவே போதுமுன்னு கவுனி அரிசியோடு
இடைப்பலகாரம் சீடையும் சீப்பு சீடையுமே...

ஏழு அடிக்க ஓயல கடிகாரமுமே
ஏழு மணிக்கே ஆச்சி கேட்டாக
ஏழாகிப் போச்சு தம்பு என்னவேணும்
ஏழுதானே ஆச்சு என்றேன் ஆச்சியிடம்...

இரவு பலகாரம் என்ன வேணும்
இடியாப்பம் தேங்காய் பாலோடு வேணுமா
இடியாப்பம் தாழிச்சு தரட்டுமா சட்னியோடு
இட்லி மெதுவாக அவிச்சு தரட்டுமா...

கல்தோசை இரண்டு வச்சு தரட்டுமா
கல்கண்டு சாதம் செஞ்சு தரட்டுமா
கதம்ப சட்னியோடு இளந்தோசை தரட்டுமா
கலந்த அவியலோடு அடை தரட்டுமா

ஊத்தப்பம் வேணுமா கார சட்னியோடு
ஊரின் பெயர் சொல்லும் சமையலிலே
ஊர் விட்டு வந்த என்னை
ஊறித் திளைத்து மலைத்துப் போனேன்..

இரவு எட்டாகிப் போச்சு உணவோடு
இரவு உணவாக இட்லியோடு சட்னியும்
இனிப்பு கல்கண்டு சாதமும் சேர்ந்து
இனிதாக கனிந்தது முதல் நாள்...

இன்னும் தொடரும் - கடைசி பாகம்
(செட்டிநாடு பற்றி, (புள்ளி)விவரம்)

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...