Monday 4 May 2020

எழுத்துக்களின் அதிசயம் - Magic in English Alphabets - Handwriting Analysis

ஆங்கில எழுத்துக்களில் ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கிறது ஓர் அதிசயம். ஆம். நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் நம் எண்ணத்தின் வெளிப்பாடு. நம் எண்ணத்தின் சேர்க்கைகள் வடிவமெடுத்து நம்மை அறியாமலே நாம் வெளிப்படுத்தும் ஓர் அதிசயம் தான் நம் எழுத்தும், கையெழுத்தும். 

சரி, இது ஆங்கில எழுத்திற்கு மட்டும் தானா என்று கேட்டால், எனக்குத் தெரிந்தவரை ஆங்கிலமே பெரும்பாலான மக்களின் பயன்பாட்டு மொழியாகவும், எழுத்து வழி மொழியாகவும் இருந்து வருவதால், அந்த மொழிக்கே நாம் எழுதும் எழுத்தும், கையெழுத்தும் சொல்லும் மர்மமென்ன என்று அறியப்பட ஏதுவாய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன இந்த கிராபலாஜி. பிற மொழிகளிலும் இவ்வாராயாச்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. 

சரி, நாம் இப்போது ஆங்கில எழுத்துக்களில், அகர வரிசையில் முதல் 5 எழுத்துக்களின் கையெழுத்து கூற்றைப் பார்ப்போம். 

First we will see Capital Letters

1. A

இதன் வடிவமைப்பைக் கொண்டு அவர்களின் அன்பு மற்றும் பெற்றோர்களின் மேல் அவர்கள் வைத்திருக்கும் பாசத்தினை அறிய முற்படமுடியும். 

With this capital letter "A", it can be found out how much love and affected the person is and how much affection the person have with parents. 

2. B
இந்த எழுத்தின் வடிவமைப்பைக் கொண்டு அந்த எழுத்தாளரின் மூச்சு விடும் தன்மையினையும் அவரின் உடல் நலனையும் அறிய முற்படமுடியும்.

The structure of letter "B" can help the analyst to find out the health issues of the writer. 

3. C
The structure of "C" helps the analyst to find out how much interactive the writer is

இந்த எழுத்தினைக் கொண்டு அந்த எழுத்தாளர் எந்த அளவிற்கு பேசி பழக கூடியவர் என்பதை அறிய முற்படமுடியும்.

4. D
This letters helps the analyst to find out how much the writer is physically fit and and also the sensitivity of the writer

இந்த எழுத்தின் வடிவமைப்பைக் கொண்டு அந்த எழுத்தாளர் எந்தளவு உடலளவு தகுதியுடையவராகவும், உணர்ச்சிகள் உடையவராகவும் இருக்கிறார் என்று அறிய முற்படமுடியும்.

5. E
This letter helps the analyst to find out how much the writer is expresssive

இந்த எழுத்தின் வடிவமைப்பைக் கொண்டு அந்த எழுத்தாளர் எந்த அளவிற்கு அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதை அறிய முற்பட முடியும். 

இது எல்லாம் நேரடியான ஒன்று, ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு முறையும் அவர்களின் சூழ்நிலைப் பொறுத்து மாறுபடும். ஆகவே எந்த சூழ்நிலையில் அதனை எழுதினார் என்பதை பொறுத்து தான் அமையும். அது மட்டுமல்லாமல், அனைத்து எழுத்துக்களை அலசி ஆராய்ந்த பிறகே எந்த எழுத்தாளரை அறிய முற்படமுடியும். 

These are all based on general principles in handwriting analysis. This varies from situation to situation and when the writer writes that statement, it all based on that, the handwriting of the writer varies. Each and every letter has to be analyzed and on a whole, the analyst will come to a conclusion.

அடுத்த எழுத்துக்களினை அடுத்த பதிவில் காண்போம். நன்றி

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...