Monday 10 October 2011

ஆசையாய் ஆசைபடு...


1.     ஆசையாய் ஆசைபடு
         ஆசையால் பார்ப்பதனால்
         ஆசையால் கேட்பதனால்
         ஆசையால் தொடுவதனால்
         ஆசையால் கொடுப்பதனால்
         ஆசையால் எடுப்பதனால்
         ஆசைக்குப் பங்கமில்லை
         ஆசைபடுதலுக்கும் பங்கமில்லை
         ஆசை பேராசை யில்லாமல் இருந்தால்...

         ஆசையாய் ஆசைபடு
         ஆசைத் துன்பமுமில்லை
         ஆசை இன்பமுமில்லை
         ஆசை ஓர் எண்ணம்
         ஆசையை அடைந்தே தீர்வதும் எண்ணம்
         ஆசைக்கு ஆசைபடுவதும் எண்ணம்
         ஆசைக் கிட்டாமல் அழுவதும் எண்ணம்
         ஆசையை அடக்கினால்
         ஆசை நிராசையானாலும்
         அசையாமல் வாழ்க்கை பயணிக்கும் வண்ணம்
         ஆசையை ஆள்வதும் திண்ணம்...

          ஆசையாய் ஆசைபடு
          உன் மட்டுமில்லாமல்
          உலகத் திற்காக ஆசைபடு...


2.        உன் ஆசை வாங்குவதென்றால்
          அவன் ஆசை விற்பதுவே
          ஆசையாய் ஆசைபடு
          உன் ஆசைக்காக அல்ல
          அவன் ஆசைக்காக

          உன் ஆசை ஜெயிப்பதென்றால்
          உலக ஆசையும் அதுவே
          நியதியாய் ஒருவன் தோற்பதுமே
          ஆசையாய் ஆசைபடு
          உன் ஆசைக்காக அல்ல
          அவன் (உலக) ஆசைக்காக

         உன் ஆசை கேட்பதென்றால்
         அவன் ஆசை சொல்வதுவோ - இல்லை
         அவன் ஆசை மறுப்பதுவோ - இல்லை
         அவன் ஆசை கொடுப்பதுவோ
         ஆசையாய் ஆசைபடு
        உன் ஆசைக்காக அல்ல
        அவன் ஆசைக்காக...


        உன் ஆசை இன்பமென்றால்
        அவன் ஆசையும் அதுவே
        உன் ஆசை அவன் ஆசை
        "நான்" ஆசையென தனியாகாமல் 
        "நாம்" ஆசையென பொதுவானால்
        பிரித்திடுமோ ஆசையும் தான்
        நான் நீ யென சந்தியிலே...

        ஆசையாய் ஆசைபடு
        உன் ஆசைக்கும் அல்ல
        அவன் ஆசைக்கும் அல்ல
        உலக ஆசையான பொது ஆசைக்கு
        அமைதியெனும் பெயரெடுத்து...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...