Monday 17 October 2011

இன்றைய கல்வி நிலை...


புத்தகத்தினைச் சுமையாக சுமந்து
புத்தியினைக் கற்க மறந்து
புழுதியில் மடியும் தருணங்கள்...

மார்க் என்று பட்டியலிட்டு
மதிப்பெண் என்று மதிப்பிட்டு
மதிப்பில்லா உயிர்களில்
மரணத்தினைத் தினிக்கிறது...

படித்தோர் எல்லாம் அறிஞரா
படித்தோர் எல்லாம் பண்பாளரா
படித்து தெரிய பட்டமில்லை
படித்ததைக் காட்ட தான் பட்டம்
படித்ததை சொல்லித் திரிய அல்ல....

புத்தகம் கொடுத்து
புத்தகத்திற்கு சுருக்க உரை கொடுத்து
புத்தகத்தின் வரி பிறழாமல்
புதுமைகளை முடக்கி
புது சிந்தனைகளைச் சிதைத்து
புத்தியினை விற்கும் கூடம்
புதுமை மழுங்கி கிடக்கும் பள்ளிகூடம்....

எழுத்து கூட மாறாமல்
எண்ணம் அது சேர்க்காமல்
எது சொன்னாரோ
எது கற்பித்தாரோ
எதுவாகினும் எழுத்தானால்
எப்படி இருப்பர் மாணவரும் தான்
எழுந்து நின்றும் முடவனாய்
எழுச்சி மறந்து மடையனாய்...

இன்றைய கல்வி நிலை
இளைப்போர் உருவாக்கும்
இளைய சமுதாயம்
இழந்திருக்கும் அறிவினை
இதுவா நாளைய சமுதாயம்
சிந்திப்பீர்...

ஆய்ந்து படித்து
ஆழ்ந்து படித்து
அனுபவத்தில் படித்து
அனுதினமும் படித்து
அக்கறையாய் பகிர்வதே
அறிந்ததின் நோக்கம்...

அறிவோம் அறிவினை
அடுத்தவருக்காக அல்ல
நம்மை நாமே அறிந்து கொள்ள...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...