Friday 3 February 2012

அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!


திருமாலின் திருவடியை தினம் நினையும்
பெருமானின் சேவையில் பெருந்தவம் புரியும்
திருவருளால் என்படியும் தன்படியென அறியும்
ஒருவேளையும் மறவாமல் அருள்வாய் பொழியும்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

திருப்பாவை நவின்று பொருட்பாவை தந்தீரே
திருமாலின் பிரபந்தத்தின் கருத்தாழம் நவிழ்ந்தீரே
திருவடி குருவடி தினம் பணிந்தீரே
திருச்சின்னம் புகழ்பரப்பும் அழகிய சிங்கரே
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

புதுமைகள் புதுப்பித்து புதுமடம் தந்தவர்
புன்னகை பெருமானின் பூஜை கண்டவர்
புதுக் கல்வி பெருஞ்சோலை தந்தவர்
புகழ் பரப்பும் வேதபிரபந்தப் பாடசாலை காப்பவர்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

எழில் பொங்கும் எம்பிரான் நாராயணர்
எழிலாய் அவர்பெயரில் எட்டாய் வந்தவர்
எத்திக்கும் வைணவம் எளிதாய் பரவுவர்
எந்தையில் ராமானுஜ சித்தாந்தம் முனைபவர்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

கருடசைலப் பெருமாளின் கருணை அஹோபிலமே
வருடவரும் தென்றலாம் வர்ண ஜாலமே
கருடகிரி நம்மாழ்வார் வித்திட்ட மாலோலமே
விருட்சத்தின் வழிவரும் மடத்தின் 45வதுபட்டமே
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

மூலச் சிங்கர்களின் முத்தாய் அருட்பெற்று
மூன்று சிங்கர்கள் உடன் வரப்பெற்று
மூன்றின் ஒருவராய் வேத வழிப்பெற்று
மூத்த சிங்கரே! அழகிய சிங்கராய் பெயர்பெற்று
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

திருவள்ளூர் தேர் கொடுத்து பவணிவர
திருப்பத்தி யுலா பெருமானும் சிரித்துவர
திருவரங்க பெருமானின் புகழ் பரவிவர
திருநாடு சஞ்சாரம் ஓர்நாளும்தளராமல் செய்துவர
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

கிரந்தங்கள் அவையாவும் பெருமாள் புகழ்பாடல்
கிரந்தங்கள் புகழ்மணக்கும் சபையாவும் உம்மால்
கிரந்தமும் வேதமும் நவிழும் வேதவிற்பன்னர் வாழ்வில்
கிரந்தவேத விற்பன்னரின் இக்காலம் பொற்காலம் உம்மால்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

ஆண்டுக்கு இருமுறை வித்வான்களின் வித்வம்
ஆண்டுக்கு நான்குமுறை வேத பாராயணம்
ஆண்டாய் விற்பன்னர் உள்ளங்களின் உள்ளம்
ஆண்டு ஆசியோடு பெரும் பேறு பெற்றனம்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

சொர்ன மண்டபம் கொலுவிறுக்கும் திருமால்
சொல்லால் இனிக்கும் உப்பிலியப்பனுக்கோ! சொர்னபூணூல்
சொல்லி சொல்லி பூரிக்கிறோம் உந்தன் பெயரால்
சொல்லாமல் விட்டமையோ ஏராளம் உந்தன்அன்பால்
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

சொல்லால் பாடி சொல்லவந்தோம் நாடி
சொல்ல சொல்ல மணக்கும் சொற்குவியலோ கோடி
சொல்ல முடியுமா வார்த்தையில் 20ஆண்டுகள் ஓடி
சொல்லில் அள்ளமுடியா அருட்சேவை புரிந்ததைப் பாடி
அற்புதமே! ஆதிவண் சடகோபன் வழி சிங்கமே!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...