Friday 13 July 2012


கவிதைகள் - பணம்

பணம் - 1

பிணம் தின்னும் கழுகுகள்
பின்னோக்கி நடந்தன
பிச்சைக்காரன் தெருவோரத்தில்
பிணமாய்...

பணம் - 2

செல்லா காசுகளை முடித்து வைத்து
செல்லும் காசுகளை தொலைத்திருந்தாள்
செல்லாத்தாள் பாவம்
செல்லாமல் போய்விட்டாள் - ஆம்
சொல்லாமல் போய்விட்டாள்
செனக்கூட்டத்திற்கு சுமையாகி போனாளே....

பணம் - 3

உணர்வுகளை தொலைத்து
உறவுகளை காவு கொண்டு
ஊருக்கு விலை போகிறது
உயிர்கள் இங்கு
உயிரற்ற பணத்தில் மோகம் கொண்டு...

பணம் - 4

செருக்கேறி மெருக்கேறி
உடலேறி உருமாறி
உயிரற்ற ஜடங்கள்
அன்பை தொலைத்து
அச்சேறிய தாளுக்கு
அடித்துக் கொள்ளும் அலங்கோலம்
அவணியின் நிகழ்காலம்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...