Friday 13 July 2012


கவிதைகள் - ஏணி

ஏணி  - 1

ஏற்றி விடும் பொழுதெல்லாம்
ஏற்றமே நோக்கமென்று
ஏறி போனாலும் திரும்பி பார்
ஏறும் பொழுதெல்லாம் உன் அழுத்தத்தில்
ஏறிய படிகள் உனை மட்டும் சுமக்கவில்லை
ஏறும் போதெல்லாம் உன் சுமைகளையும் தான்...

திரும்பி பார்
ஏணி இன்னும் காத்திருக்கிறது
எட்டி உதைத்தாலும் ஏற்றி விட...

ஏணி - 2

ஒவ்வொரு முறை கதை சொல்கிறது
ஒவ்வொருவரின் வாழ்க்கை சொல்கிறது
ஒரு நாளும் அதன் கதை
ஒருவருக்கும் தெரிவதில்லை
ஒருவருக்கும் புரிவதில்லை
அதற்கும் படிகள் இருக்குமென்று
அதன் படிகளும் வலிக்குமென்று...

ஏணி - 3

எத்தனை முறை ஏறினாலும்
எத்தனை முறை இறங்கினாலும்
ஏற்றத்திற்கு உதவாமல் இருப்பதில்லை
ஏற்றத்தையும் இறக்கத்தையும்
என்றுமே பொருட்டாய் கொள்வதில்லை
ஏணியும் தோணியும் ஒன்று தான்
நம்மை கரை சேர்ப்பதால்... 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...