Tuesday 27 September 2011

கொலு...



பொம்மையாய் பொம்மைகள்
பொம்மைக்குள் பொம்மையாய்
பொம்மைகள் அணிவகுக்க
பொம்மைகள் அலங்காரம்
பொம்மியே பொம்மைகளின் கொலு....


திருவாய் மலர்ந்தவர்
திருவருள் தருபவர்
திருவடி போற்றுவோர்
திரு க்களின் திரு உருவங்கள்
தினம் பொம்மையாய் அவதாரம் கொலு....


உருவம் தந்தவர்கள்
உருவமாய் இருப்பவர்கள்
உருவமளித்த இதயங்கள்
உருவும் உயிருமான உன்னதர்கள் - இன்று
உருவமோடு பொம்மையாய் கொலுவில்...


தினம் ஒரு கதை சொல்லி
தினம் ஒரு ராகம் பாடி
திகட்டாத சுண்டல் தந்து
தித்திக்கும் பழம் தந்து
தினுசாய் ரவிக்கை தந்து - நம் வீட்டு
திருமகள்கள் கொண்டாடும் கொலு...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...