Sunday 1 May 2011

மே 1 - உழைப்பவர் தினம்

உழைத்து உழைத்து ஓடானாய்
உடம்பில் திரானியில்லாமல்
உதிரமும் வேர்வையாகி
உற்றமும் சுற்றமும்
உலைக்குத் தேடி
உயிர் வாழும் முறை - ஏன்

என் இனிய உழைப்பே - உனக்கு
எஞ்சியது தான்
எங்களுக்கு மிச்சம் - நீ
எச்சத்தோடு வாழு உயர்வாக
எண்ணம் போல் வாழ்வாகும்
எழட்டும் எழுச்சியோடு...

மற்றுமொரு நாளல்ல மே 1
மறவாமல் டிவி பார்த்திருக்க
மரமாக இல்லாமல்
மருத்தளித்து நிற்காமல்
மகிழ்ச்சியோடு வாழ்த்துவோம்
மனிதருள் மாணிக்கங்களை...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...