Wednesday 20 March 2013

பூக்கள் நெய்த ஆடை


அடுக்கி வைத்த விறகொன்று சிரித்தது
அடுக்காத விறகினை நோக்கி..

விதையாய் விழுந்த போது
விருட்சமாய் கற்பனையிட்டேன்
விழுந்ததில் தேய்ந்திருப்பேன் என
வினை சிரிப்பில் ஆழ்ந்தனர் சிலர்...

வின் நோக்கி வளர்ந்தேன்
விதை செடியாகி துளிரிட்டது...

செடியாய் வளர்ந்து கொடியாய் படர்ந்தேன்
செறுக்கின்றி மிடுக்கோடு வளர்ந்தேன்
செடியில் கிளை வைத்து மரமானேன்...

மரமாகி கிளை வைத்து
மறக்காமல் கிளையெல்லாம் இலையிட்டேன்
மண்ணும் வின்னும் பசுமையிட
மரகந்த சேர்க்கைக்கு அரும்பு விட்டேன்...

மொட்டாய் இருந்தது
மொத்தமாய் மலர்ந்தது
பூவாய் ஜனித்தது...

தலை நிமிர்ந்து வான் நோக்கினேன்
தலை சாய்ந்து கீழும் நோக்கினேன்
தரித்திரமாய் செறுக்கு வந்து
தாங்காத ஆட்டமிட்டேன்.

சிந்தித்து செயல்பட கூடலையோ
சிந்தையில் ஒருமையிட முடியலையோ
சிந்திக்காமல் செய்தவினை
சிந்தினேன் சிறகான கிளைகளை....

வெட்டி எரிந்தனர்
விறகாய் போனேன்
வீண் ஜம்பம் செய்தமையால்...

மொட்டிட்டு மலர்ந்த பூ
மொத்தமாய் கொட்டியது
இன்று பூக்கள் நெய்த ஆடையானது
நான் பார்த்த பூமி
என் மலரால் மென்மையிட்டு
எனக்கே பாதையானது...

கிளையே நீயும் சொல்
வீண் ஜம்பம் வேண்டாமென்று
வீணாய் ஆடவேண்டாமென்று
ஆறறிவு மனிதனுக்கு....

வீழ்ந்தது மரம் மட்டுமல்ல
வீழ்ந்தது ஆணவமும் தான்
விறகுகள் சேர்த்து
இயந்திர மனிதராய் ஆக வேண்டாமென்று....
பூக்கள் நெய்த ஆடை

அடுக்கி வைத்த விறகொன்று சிரித்தது
அடுக்காத விறகினை நோக்கி..

விதையாய் விழுந்த போது
விருட்சமாய் கற்பனையிட்டேன்
விழுந்ததில் தேய்ந்திருப்பேன் என
வினை சிரிப்பில் ஆழ்ந்தனர் சிலர்...

வின் நோக்கி வளர்ந்தேன்
விதை செடியாகி துளிரிட்டது...

செடியாய் வளர்ந்து கொடியாய் படர்ந்தேன்
செறுக்கின்றி மிடுக்கோடு வளர்ந்தேன்
செடியில் கிளை வைத்து மரமானேன்...

மரமாகி கிளை வைத்து
மறக்காமல் கிளையெல்லாம் இலையிட்டேன்
மண்ணும் வின்னும் பசுமையிட
மரகந்த சேர்க்கைக்கு அரும்பு விட்டேன்...

மொட்டாய் இருந்தது
மொத்தமாய் மலர்ந்தது
பூவாய் ஜனித்தது...

தலை நிமிர்ந்து வான் நோக்கினேன்
தலை சாய்ந்து கீழும் நோக்கினேன்
தரித்திரமாய் செறுக்கு வந்து
தாங்காத ஆட்டமிட்டேன்.

சிந்தித்து செயல்பட கூடலையோ
சிந்தையில் ஒருமையிட முடியலையோ
சிந்திக்காமல் செய்தவினை
சிந்தினேன் சிறகான கிளைகளை....

வெட்டி எரிந்தனர்
விறகாய் போனேன் 
வீண் ஜம்பம் செய்தமையால்...

மொட்டிட்டு மலர்ந்த பூ
மொத்தமாய் கொட்டியது
இன்று பூக்கள் நெய்த ஆடையானது
நான் பார்த்த பூமி
என் மலரால் மென்மையிட்டு 
எனக்கே பாதையானது...

கிளையே நீயும் சொல்
வீண் ஜம்பம் வேண்டாமென்று
வீணாய் ஆடவேண்டாமென்று
ஆறறிவு மனிதனுக்கு....

வீழ்ந்தது மரம் மட்டுமல்ல
வீழ்ந்தது ஆணவமும் தான்
விறகுகள் சேர்த்து
இயந்திர மனிதராய் ஆக வேண்டாமென்று....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...