Wednesday 20 March 2013

தள்ளி யிருப்பவளே நெருங்கி வா...

தனியாக தவிக்க விட்டு
தன்னந்தனியே ரசிக்க விட்டு
தள்ளி யிருப்பவளே நெருங்கி வா...

கனவாய் இருப்பவளே
கற்பனையாய் உனை வடிவமைத்து
கண்ணுக்குள் பூக்கிறேன்...

என்னை எத்தனை முறை கடந்தாயோ
என்னை எப்படியெல்லாம் பார்த்தாயோ
எனக்கே தெரியாமல்...

உன்னை தேடுவதாக நினைத்து
உன்னிடமே கேட்டிருப்பேனோ
உன்னைப் பற்றி...

அன்பே!!!!
அழகாய் வடிவமைத்து
அடுக்காய் சொல்லெடுத்து
அழகாய் சமைக்கிறேன் கவிதையினை
அருகில் வா சேர்ந்தே ரசிப்போம்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...