Wednesday 20 March 2013

தேடுகிறேன் என் பைங்கிளியை... (ஒரு உள்ளத்தின் தேடல்)


தொலையாத ஒன்றை
தொலைத்தது போல் தேடுகிறேன்
தொலைவில் இருக்கும் நீ
தொலைந்து போனதாய் தேடுகிறேன்...


எங்கே இருக்கிறாயோ
என்ன நினைக்கிறாயோ
எனக்காகப் பிறந்தவளே
என்னைக் காக்க விட்டு
எனக்காக காத்திருப்பவளே...

அடி மேல் அடிவைத்து
அலையாத என் மனதை
அளவிட வருவாயோ
அள்ளிப் பருக ஆசையோடு வருவாயோ...

துள்ளும் இதயம் உன் நினைப்பில்
துவளாமல் காத்திருக்க
துடிப்போடு துடிக்கிறது இதயம்
துயிலும் தருனத்திலும் உன் நினைவில்
எங்கே என் பைங்கிளியே...

காத்திருக்கிறேன் காணவில்லை
காத தூரம் பார்த்திருக்கிறேன்
காணும் விழியெல்லாம் பூத்திருக்கிறேன்
காதலோடு நீ வருவாய் என...

உன்னை எப்படி அழைப்பேனோ
உன்னை எப்படி காப்பேனோ
உன்னை எப்படியெல்லாம் கொஞ்சுவேனோ
உன்னை எப்படி வெட்கமாய் இருக்கிறது
உன் நினைவில் நான் வெட்கமிடுகிறேன்...

காதல் ரசத்தில் மூழ்கி
காதல் சயனத்தில் ஆழ்ந்துவிடுகிறேன்
காதல் தேவதையே
காத்திருக்கிறேன் நீ வருவாய் என...

தேடுகிறேன் என் பைங்கிளியே
தேடுகிறேன் என் பார்வைக்காக
தேடுகிறேன் என் உள்ளத்தின் வாயிலாக..

இது ஒரு இனிய பயணம்
இலக்கும் நோக்கமும் இனிதாக
இடைவெளி விட்டு பயணிக்கும் பயணம்
அருகாமை தேடி....
தேடுகிறேன் என் பைங்கிளியை...
(ஒரு உள்ளத்தின் தேடல்)

தொலையாத ஒன்றை
தொலைத்தது போல் தேடுகிறேன்
தொலைவில் இருக்கும் நீ
தொலைந்து போனதாய் தேடுகிறேன்...


எங்கே இருக்கிறாயோ
என்ன நினைக்கிறாயோ
எனக்காகப் பிறந்தவளே
என்னைக் காக்க விட்டு
எனக்காக காத்திருப்பவளே...

அடி மேல் அடிவைத்து
அலையாத என் மனதை
அளவிட வருவாயோ
அள்ளிப் பருக ஆசையோடு வருவாயோ...

துள்ளும் இதயம் உன் நினைப்பில்
துவளாமல் காத்திருக்க
துடிப்போடு துடிக்கிறது இதயம்
துயிலும் தருனத்திலும் உன் நினைவில்
எங்கே என் பைங்கிளியே...

காத்திருக்கிறேன் காணவில்லை
காத தூரம் பார்த்திருக்கிறேன்
காணும் விழியெல்லாம் பூத்திருக்கிறேன்
காதலோடு நீ வருவாய் என...

உன்னை எப்படி அழைப்பேனோ
உன்னை எப்படி காப்பேனோ
உன்னை எப்படியெல்லாம் கொஞ்சுவேனோ
உன்னை எப்படி வெட்கமாய் இருக்கிறது
உன் நினைவில் நான் வெட்கமிடுகிறேன்...

காதல் ரசத்தில் மூழ்கி
காதல் சயனத்தில் ஆழ்ந்துவிடுகிறேன்
காதல் தேவதையே
காத்திருக்கிறேன் நீ வருவாய் என...

தேடுகிறேன் என் பைங்கிளியே
தேடுகிறேன் என் பார்வைக்காக
தேடுகிறேன் என் உள்ளத்தின் வாயிலாக..

இது ஒரு இனிய பயணம்
இலக்கும் நோக்கமும் இனிதாக
இடைவெளி விட்டு பயணிக்கும் பயணம்
அருகாமை தேடி....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...