Friday 22 April 2011

உள்ளேயேத் தீயிட்டு கொளுத்துங்கள்


வருடத்திலோ 365 நாட்கள் 
ஆண்டுகள் பல கடந்தும் 
ஒரு சில நாட்கள் 
நெஞ்சிலே வடுக்களாய்... 

நெஞ்சின் வடுக்கள் 
வேர் விட்டு 
கிளையிட்டு, மொட்டுமிடுகிறது 
துயரத்தை நீர் ஊற்றுவதால் 
மனதோடு அழுது... 

பல நாட்கள் மகிழ்ந்திருந்தும் 
பட்சி போல் பறந்திருந்தும் 
பட்டியிலிடுகிறது மனம் 
சில நாட்களை மட்டுமே.... 

மனம் அழுது அழுது 
கண்ணீராய் வெளியேறுகிறது.... 

சில நிமிடச் செய்திகளை 
பல நிமிடம் பேசியே 
பழகிய நாம் 
பழுத்த கிழங்களை நோகடித்து 
பழமையில் உழல்கிறோம்.... 

கடப்பது காலம் மட்டுமல்ல 
தேவையற்ற நிகழ்வுகளும் தான் 
எதிலும் பழமை வேண்டாம் 
வேதனையாகும் போது.... 

உள்ளேயேத் தீயிட்டு கொளுத்துங்கள் 
உள்ளம் கொதிக்காமல் 
உள் வேதனைகளை.... 

அழுவது அர்ப்பத்தனம் 
புழுங்குவது கோழைத்தனம் 
வாழ்வது தான் வீரத்தனம் 
வாழ்வோம் 
வாழ்க்கை வாழ்வதற்கே.... 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...