Friday 22 April 2011

பெண் என்றுமே சகாப்தம்...


ஆறாத வடுவென்றும் 
தீராத சோகமென்றும் 
நீர் தவளையாய் ஓலமிட்டால் 
நீர்த்துவிடும் உண்மையன்றோ 
பொய்யான உலகுதனில்.... 

வேர் விட்டு உள்ளோடி 
மனமும் அதில் தள்ளாடி 
முட்களிலே கலந்தாடி 
வலிக்குது மன்மென்றால் 
யார் சொல்ல நீதியுனக்கு 
முட்களோடு உறவாடியதற்கு... 

விரும்பி பிரியவில்லை 
விரும்பாமல் விலகிச் செல்கிறேன் 
தொடரட்டும் பயணமென 
கட்டாய உலகில் 
கண்ணியின் கதையினை - உண்மையாய் 
கதைத்திடுவோர் யார் உளர்... 

பெண் 
என்றுமே சகாப்தம்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...