Friday 22 April 2011

சிலைகள்


உளியோடு உறவாடி
பாறைகள் சிலையானது
வியாபார அரசியலோடு
ஒப்பந்தம் போட்டது
வீதிக்கு ஒன்று விலாசமானது...

முழுமையாய் வாழ்ந்தவருக்கு
முகம் மட்டுமாய்
மார்பு வரை
என்ன கொடுமை இது - அவர்கள்
உடலை மட்டும் குறைக்கவில்லை
உயர்வான சிந்தனைகளையும் தான்...

ஆங்காங்கே
கல்வி தந்தைகளுக்கும் உருப்பெற்றது.

வித்தை பல கற்று
சாதித்த கூட்டத்திற்கு
சிலைகள் எங்கேனும் உண்டோ
ஒரு சில விதிவிலக்காய்....

சிலைகள்
காக்கை எச்சமிட
சூரியனும் சந்திரனும் தழுவிட
மழை குளியாட்டிட
புயல் துடைத்துவிட
ஆடை இருந்தும்
நிர்வானமாய் தெருக்களில்..

சிந்தித்துப் பாருங்கள்
தலைவர்கள் சிந்தனைகளை
திட்டங்களாய் செயலிடுங்கள்
திட்டமே சிலையாகும்
மக்களாய் உருவமெடுத்து
காக்கை எச்சமிடாமல்....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...