Friday 22 April 2011

மனம் மறு கனவிற்கு


நானும் நீயும் 
பேசிய வார்த்தைகள் 
நாளும் பொழுதும் 
மறவாமல் அசைபோட 
முடியும் முன் 
சூரியன் ஒளிப் பொட்டாய் 
இருள் மேகத்துள்.... 

பொழுது புலர்கிறது 
பொன்னான நினைவுகள் 
பொற்குவியலாய் குவிந்திருக்க 
மனம் உன்னை நினைத்தே 
கடனாய் காலை கடமைகள்.... 

கடமைகளுள்ளும் நீயே 
கற்சிலையாய் நீயே 
கனவும் நினைவும்... 

உன்னை சந்தித்த ஒரு விநாடி 
மனம் மறு கனவிற்கு 
அஸ்திவாரம் போடுகிறது 
நேற்றைய கனவுகளின் மேலே....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...