Friday 22 April 2011

பெண்களே தடையிடுங்கள் பிரசவிப்பதை...


அம்மாவும் அப்பாவும் 
அப்பாவும் அம்மாவும் 
அரவணைப்பில் ஆரம்பம் 
அழகான வாரிசு... 

ஆணாகப் போனதால் 
மேலும் இங்கு ஆனந்தம் 
புரியாமல்... 

அப்பனுக்கு வேலையில்லை 
அம்மாவோ மாடாகத் தேய்கிறாள் 
அம் மாட்டுடன் தேய்கிறாள்... 

மாடு சும்மாவா 
பால் கொடுக்கும் 
புல்லுக்கே வழியில்லை 
புள்ளைக்கு பால் எங்கிருந்து... 

புட்டிப் பால் கொடுக்க 
வஞ்சகமா அவளுக்கு 
புட்டிப் பால் 15ரூபாய் 
எங்கு போவாள் அவளுமே... 

அழுது அழுது 
கண்ணீரே பாலாய் ஆனது 
அதுவும் சுரக்க 
அந்த உடம்பில் திராணியில்லையே.... 

அவளும் என் செய்வாள் 
அரசாங்கத் தொட்டிலிலே 
அவனை விட்டு வந்தால் 
அவள் புருஷன் 
அடுத்த பிள்ளைக்கு 
அஸ்திவாரம் போடுறானே... 

பெண்கள் பெற்றெடுத்துக் கொண்டிருந்தால் 
ஆண்கள் உருவாக்கி கொண்டிருப்பார்கள் 
பெண்களே! 
தயவு செயது 
தடையிடுங்கள் பிரசவிப்பதை 
தரம்கெட்ட ஆண்களுக்கு,,,,

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...