Friday 22 April 2011

குடிக்காதே!!!


மது உள்ளே சென்று 
மதியிழக்கச் செய்கிறது - உன்னை 
மயக்கிச் செயலிழக்கச் செய்கிறது... 

உன் 
மறுபக்கம் பட்டியலிட்டு 
முதற்பக்கம் மறைக்கிறது... 

உள்ளே சென்று 
உறுப்புகளோடு உறவாடி 
உள்ளேயேக் கொல்கிறது... 

உன்னை மட்டும் கொல்லாமல் 
உறவுகளையும் கொல்கிறது 

உலைக்கு வினைவைத்து 
உளருவதால் மானம் கெட்டு 
ஊரை இரண்டாக்கும் குடிக்கு 
உத்தமரே அடிமையாகலாமோ 
தயவு செய்து குடிக்காதே!!! 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...