Friday 22 April 2011

கனவு காணுங்கள்....


பகலும் தூங்கி 
இரவும் தூங்கினான்
பொழுது மட்டும் விடிகிறது 
கனவுகளே இல்லாமல் - இதில் 
தன் குறை எங்கே என்றான்????

கனவு வந்தால் தானே 
கனவு காண 
என்றான் விரக்தியுடன் 
"கனவு காணுங்கள்" பொய்த்ததோ - இல்லை 
கலாம் பொய்த்தாரோ என்று....

நண்பனே! 
நல் எண்ணம் விதைக்கவில்லை 
முயற்சி எனும் உரமில்லை - அதனால் 
கனவும் முளைக்கவில்லை 
இதில் வருந்த ஒன்றுமில்லை...

விதையான எண்ணங்கள் 
உறங்க விடுவதில்லை 
விருட்சமாய் வளர 
கனவாய் மொட்டு விடும்...

சாதித்தவர்கள் பட்டியலிட்டால் 
சாதனைகள் அவர்கள் கனவுகள் 
பல வெற்றி கண்டுபிடிப்புகள் 
கனவாய் மொட்டிட்ட நொடிகள்..

கலாம் என்றுமே பொய்த்ததில்லை 
கனவு காணுங்கள் 
உறக்கதில் இல்லை.... 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...