Friday 22 April 2011

சுனாமி


சிற்றலையால் நோட்டமிட்டு 
பேரலையால் வாரிக்கொண்டது... 

கடல் 
உள்ளே நீர் வாங்கினால் 
உள்ளம் திகிலடைகிறது 
தாகம் தீர்க்கவோ - இல்லை 
உயிர்த் தேகம் பறிக்கவோ..

சிற்றலையாய் வரும் போது 
சினுங்கியது காலோரம் 
பேரலையாய் வந்த போது 
மொத்தமாய் பேசியே 
சினுங்கினர் உறவினர் ஊரெல்லாம்.... 

அலை 
ஒவ்வொரு முறையும் 
ஒரு செய்தி சேகரித்து 
யாரிடம் சொன்னாயோ 
பேரலையாய் வந்து 
மக்கள் சேதி ஆனார்களோ! 

அலையே 
சின்னமாய் வந்தபோது 
செல்லமாய் வருடினாயே 
என்ன பாவம் செய்தோம் 
பேரலையாய் வந்து 
எங்களை காவு கொண்டாயே.... 

அலைகள் 
சுகமானது சிறிதானால்........... 

கடல் நீண்டதனால் 
வாரியதன் உருவமில்லை 
ஊர் வந்து வாரியது 
பெயர் மட்டுமே மிஞ்சியது... 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...