Friday 22 April 2011

பிச்சை


வெறும் திருவோட்டில் 
தினம் வாழும் உத்தமன்... 

பிச்சைப் பாத்திரத்தில் 
எது விழுந்தாலும் சாப்பிடுவான் 
பணம் தவிர.... 

இரண்டு கண்கள் 
இரண்டு கால்கள் 
இரண்டு கைகள் 
வஞ்சனையில்லை எதிலுமே 
இருந்தும் வெட்கமின்றியேந்திடுவான்.... 

தன் மானம் விற்று 
தன்னம்பிக்கையும் விற்று 
தரமின்றி வாழ 
தட்டினை ஏந்திடுவான்... 

கேட்டால் 
இந்தியாவின் குலத்தொழிலாம் 
தன்னை மட்டுமல்ல 
நம்மையும் அவமதிக்கும் செயல்.. 

இனி ஒரு விதி செய்வோம் 
தட்டு ஏந்துபவனை 
தட்டி வைப்போம் - தேவையெனில் 
தடி கொண்டு துரத்துவோம் 
தடையில்லாமல் உழைக்க.... 

பிச்சையிடாதீர்கள் 
பாத்திரம் அறியாமல்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...