Friday 22 April 2011

பிரிவே தெரியாது...


தூரத்தேப் போனாலும்
தூர்வாரும் நினைவுகொண்டு
ஆழமிடும் அன்பினை
அலை அலையா எண்ணங்கள்
தினம் தினம்
மனதில் ரீங்காரமிடும்....

சண்டையிட்ட நாட்களை
சத்தமின்றி சிந்தித்து
மனதிற்குள் சிரித்து
வெளியில் சத்தம் வரும்...
மௌனமாய் மொழிகள் பேசி
மௌன கீதங்கள் பாடும்....

சிரித்த நக்கல் பேச்சு
கும்மாளமிட்ட கேலி பேச்சு
கிண்டலாய் போன நொடிகள்
சினம் வந்த வேளைகள்
அப்பப்பா சிரித்தே வெரட்டிய நேரங்கள்..
எல்லாம் சேர்ந்து வரும்
பிரிவே தெரியாது
பிரிந்தால் தானே.

வேகமாக ஓடிவா
நிழலோடு ரசித்ததை..
நிஜத்தோடு பகிர

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...