Friday 22 April 2011

உடல் தானம்


ஊர் கூடியது 
நாட்டாமை நடுநாயகமாய் 
பெரியவர்கள்(?) மத்தியில் 
சில்லறைத் திருடன் 
ஹவாலாக்களின் விசாரணையில் 
சிறையிலடப்பட்டான் 
பின்னர் தூக்கிலிடப்பட்டான் 
குற்றங்களைப் பட்டியிலிட்டே... 

ஊரே திரண்டது 
உயர் அதிகாரிகள் சங்கமிக்க 
ஊர்வலமாய் அவன் 
வசைப் பொழிய வில்லை 
பூக்களால் தூக்கப்பட்டான்... 

உயிர் உள்ள மட்டும் 
உலகையே உறவறுத்தவன் 
உடல் தானத்தால் 
உன்னதம் கொண்டான் - பலர்
உள்ளம் கொள்ளை கொண்டான்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...