Friday 22 April 2011

பிரியாவிடை


பிரிவென்று சொல்லி 
விடைபெறவில்லை 
தொடரட்டும் பயணமென 
விலகிச் செல்கிறேன்... 

விடியலற்ற நாட்களை 
உன்னதமாய் பட்டியலிட்டு 
விடியலையே சபிக்க 
விரும்பாமல் விலகுகிறேன். 

உறவுகளே! 
கண்ணீரில் கசங்கும்போது 
எந்நீர் செந்நீரானது 
என் இதய கடிகாரம் 
முட்களை முட்களால் நகர்த்தியது... 

மனம்! 
ஓர் மந்திரச்சாவி 
தந்திரங்கள் பலசெய்து 
சோகத்தையேச் சுகமாக்கியது 
வாழ்க்கைப் பயணமாக்கியது. 

என் இதயங்களே! 
முள்ளான வேதனைகளை 
முடுக்க வேண்டாமென 
முற்றுப்புள்ளி வைக்கிறேன் 
தொடரட்டும் பயணமென 
விலகிச் செல்கிறேன்..

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...