Friday 22 April 2011

ஆழிப் பேரலை (சுனாமி)


ஆழிப் பேரலையோ இல்லை - எம்மை
ஆழம் பார்க்கும் பேரலையோ - நீ
ஆடிச் சென்ற பின்
ஆரவாரமின்றி அடங்கிவிடுவோம் என
ஆசை கொண்டாயோ....

விட்டுச் சென்ற சுவடுகளில்
விடுகதைப் போல்
விடைத் தேடுவோம் என நினைத்தாயா - இல்லை
வினாக்களை விட்டு விட்டு
விதியென உறங்குவோம் என நினைத்தாயா...

நீ
புரட்டிப் போட்ட குவியல்களில்
புதைந்து போனது 
புதுமைகள் மட்டும் தான் - எங்கள்
புத்திகள் அல்ல 
புத்துயிர் பெறுவோம் - பல
புதுமைகள் மீண்டும் மீண்டும் படைப்போம்...

நீ
அலையாய் வந்து
அழைத்துப் போன உயிர்களுக்கு
அஞ்சலி செலுத்தியே - உனக்கு
அமர்ந்து கவி பாடுவோம் - நீ
ஆரத்தழுவிய கல்லறையிலிருந்து...

நீ
விட்டுப் போன தடையங்களை
விடாமல் பிடித்துக்கொண்டு
விடியலுக்கு வெளிச்சமிடுவோம்
விரயமானப் பொருட்களை
விதி என நோகாமல் - புது
விளைச்சலுக்கு உரமிடுவோம்..

ஏ சுனாமியே!!!!
உன் தடையங்களே
எங்கள் அரிச்சுவடி...
நீ
எத்தனை முறை அழித்தாலும்
எப்படி வந்து அழித்தாலும்
விடாமல் மலர்வோம்
உனை மறுபடியும் வரவேற்க
உனை ஆரத்தழுவி
பாடம் புகட்ட....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...