Friday 21 August 2015

உன்னை விட்டால் யார் உளர்????....

நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு...
நம்பியோர் கைவிடப்படார்..
நம்பினால் நடக்கும், நம்பிக்கையோடு தொடங்கு...
நம்பாதே உனையன்றி யாரையும்
எத்தனை முரண்பாடுகள்.. ஏன் இறைவா?
எள்ளி நகையாடும் போது
எண்ணமெல்லாம் வஞ்சமோடு ஏன்
எத்தனை முறை அடித்தாலும் வலிக்காது
என்ற நம்பிக்கை மட்டும் எப்படி உறுதியாக???????
உறுதியிட்டு நில் உரிமையோடு செல்
உனையன்றி யாருமில்லை வெல்ல
உனக்கான உலகிது நட்பே
உன்னை விட்டால் யார் உளர்????
உண்மை ஊமையாகாது உலகத்தில்
உளறல் காவியமாகாது உலகத்தில்
உதறலை விட்டு வீரநடையிடு
உன்னை விட்டால் யார் உளர்????....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...