Thursday 20 August 2015

அற்புதமாகும் பெண்ணினம்

வீணை மீட்டுவோர் நோக்குவதில்லை
வீணையிசையிலும் மாற்றமில்லை
வீணையல்ல பெண் 

மீட்டுவோரெல்லாம் இசைத்திட...

இசைத்தோடி வரும் இசைந்தோடி
இயைந்து மீட்டினால் வீணையில்
இயல்பாய் பெண்ணும் அப்படியல்ல

இசைப்போர் இயைந்தாலும் இசைக்க
இணக்கமில்லையேல் பெண்ணில்
இருக்காது இயல் இசை....

வருடும் வசந்தமாய் இசை
வருவோரெல்லாம் இயற்றிட வீணையில்
வந்தோரெல்லாம் இசைத்திட

வருவதில்லை இசையும் பெண்ணில்...

அங்கமெல்லாம் தங்கமாக்கி
அசைவெல்லாம் இசையாக்கி
அசைந்தாடும் ஓசையில் 

அள்ளிப் பெருகத் துடித்திடும்
அந்த கயவர்கள் இல்லையேல்
அர்த்தமாகும் உலகம்
அற்புதமாகும் பெண்ணினம்....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...