Thursday 20 August 2015

நீயும் நானும் ஒன்றோ

தோள் கொடுக்கும் தோழனே
தோயும் நெஞ்சை நெருடும் நேசனே
தோகை விரித்தாடும் தோழி இங்கிருக்க

தோன்றவில்லையோ சீராட்டி தாலாட்ட...

எங்கே போனாயோ என் தோழா
என்னை பாராமல் போனாயோ என் தோழா
எப்படித் தேடுவேன் என் தோழா

எண்ணமெல்லாம் உள்ளிருந்து என்னுள்ளே
எட்டாத தூரம் போனாயோ என் தோழா???

தோழா :

உன்னை மறப்பேனோ என் தோழி

உளமெல்லாம் நீக்கமற நிறைந்தவளே
உள்ளேயே நானிருக்க வெளியில் தேடலாமோ
உய்ய வழி தேடி தூரமிட்டேன்
உற்ற தோழியே! என் தமக்கையே
உண்மை இதுவென அறியாயோ?
நிழலும் நிஜமும் ஒன்றே
நித்தமும் நீங்கா உன் நினைவன்றோ
நிமிடமும் நொடியும் உன் நினைவில்
நீயும் நானும் ஒன்றோ -
ஓர் தமிழ் தாய் மக்களன்றோ

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...