Thursday 20 August 2015

தமிழே, கவிதையாய்...

அலையாய் அனுதினம் அவரோடு
அருவியாய் அன்பை பொழிய
அதுவே கருத்தாய் தொடுத்து
அமுதோடு தமிழாய் வந்ததோ
அன்பர்களின் மொழி கவிதையாய்...

தித்திக்கும் தமிழே திகைத்தாயோ
தித்திப்பான எங்கள் அன்பில்
திகட்டா மொழியில் குலைந்து

தினமும் மகிழ்வோம் நாங்களுமே
தில்லையில் திசைமாறா எங்கள் அன்புமே
தினுசாய் வருமே அருவியாய் கவிதையாய்....

 உள்ளோடு வைத்து உறவோடு வந்தது
உள்ளன்போடு திகைக்கிறோம் தினமும்
உவகையோடு செப்பியே மலைக்கிறோம்

உந்தன் மொழியில் எங்கள் அன்பை
உலகம் போற்றும் தமிழே, கவிதையாய்...

நிறம் மாறா வாசனை ரோஜாக்கள்
நித்தமும் மலரும் நித்தியமல்லி
நினைத்தே உருகுகிறோம் அன்பில்

நினைவாய் வருமே அருவியாய் களிப்புகள்
நிலையான மொழியில் செப்புகிறோம் கவிதையாய்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...