Thursday 20 August 2015

உனை தேடும் கைகள்

உனை தேடும் கைகள்
துணை தேடும் போது
நினை த்திடுமோ மனமும்

இணை ந்திடுமோ உள்ளமும்...

பின் வந்ததோ மண்வாசனை
பின் னுக்குத் தள்ளியதோ நினைவுகளையும்
முன் வந்த நாட்கள்
முன் நோக்கி வந்தனவோ கண் திரையில்...

குளிர பாதங்கள் சில்லிட
குளிர் ந்தனவோ உள்ளமும் நினைவோடு
துளிர் ந்தனவோ உணர்வுகளும் உன்னோடு
துளிர் த்தனவோ என் ஆசை கனவுகளும்...

மழை சில்லென்று தூறலிட
மழை யே வந்தாயோ வாசமிட
மழை யே நீ எங்கே போனாயோ
மழை யே நீ வண்ணமிட வருவாயோ...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...